Tuesday, February 7, 2012

<<>>தவளை இளவரசன்-11<<>>

                                 <>தவளை இளவரசன்<>
அது ஒரு மாலை நேரம்.  இளவரசியின் தோழிகள் அன்றைக்கு யாரும் 


இல்லை. அரண்மனையின் பின் பக்கம் ஒரு ஒற்றையடிப்பாதை.   


கையிலிருந்த "தங்க பந்தை"த் தூக்கிப்போட்டு விளையாடியவாறே 


நடந்துகொண்டிருந்தாள இளவரசி.  அருகிலிருந்த குளம்
தாமரைப்பூக்களால் பார்க்க அழகாக இருந்தது. சறிது நேரம் அந்த அழகைப் 


பார்த்து இரசித்துக் கொண்டிருந்தாள்.
அந்தக் குளத்தை ஒட்டி ஒரு பாறை இருந்தது.  அந்தப் பாறையில் போய்


அமர்ந்தாள்,இளவரசி.
இயற்கை அழகை இரசித்துக்கொண்டிருந்த இளவரசி எழுந்தாள். தன் 


கையிலிருந்த தங்கப் பந்தை தூக்கிப் போட்டு விளையாட ஆரம்பித்தாள். 


பந்து கீழே விழுந்துவிடாமல் பிடிப்பதும், தலைக்கு மேல்
தூக்கிப் போட்டு பிடிப்பதுமாக விளையாடினாள்.  ஒரு முறை உயரமாகத் 


தூக்கிப் போட்டு பிடிக்க முடியாமல் பந்து பாறையில் விழுந்து உருண்டு ஓடி 


குளத்துக்குள் விழுந்தது.  தங்கப் பந்து ஆனதால் குளத்துக்குள் உடனே


முழுகத் துவங்கியது.  ஆழமான குளம் அது.

இளவரசிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.  அழத் துவங்கினாள்.  


யாராவது என் தங்கப் பந்தை எடுத்துக் கொடுத்தால் எனக்குச்


சொந்தமானதையெல்லாம் கொடுத்துவிடுவேன்; என் நல்ல ஆடைகள்,
எனது நகைகள் எல்லாவற்றையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். 


யாராவது உதவி செய்யுங்களேன்," என்று அழுதுகொண்டே சொன்னாள்.

அரண்மனையின் அந்தப்புறத்துக்குள் யாரும் வரமுடியாது.  அரண்மனைக்குப் 


போய் வேலை ஆட்களிடம் சொல்லி, தண்ணீருக்குள் முழுகித் தேடச் 


சொல்ல வேண்டும்,என நினைத்தாள். அதற்குள் இருட்டிவிடுமே
என்று நினைத்தபோது இளவரசிக்கு மேலும் அழுகையாக வந்தது.

"இளவரசியே, ஏன் அழுகிறீர்கள்? என்று ஒரு குரல் கேட்டது.  சுற்றும் 


முற்றும் பார்த்தாள், எவரையும் காணோம். மீண்டும் அந்தக் குரல் கேட்டது. 


குரல் குளத்திலிருந்து வந்தது. அதுவும் தாமரை இலையில்
அமர்ந்திருந்த தவளை தான் பேசியது. பார்க்கவே அருவெறுப்பாக இருந்தது, 


அந்தத் தவளை.    
தவளை பேசுவது இளவரசிக்கு வியப்பாக இருந்தது. 
"சொறித் தவளையான உன்னால் எனக்கு எப்படி உதவ‌ முடியும்?"என்றாள் 


இளவரசி.
"முதலில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்; என்னால் 


முடிந்தால் செய்கிறேன்,"என்றது தவளை.
"என் தங்கப் பந்து இந்தக் குளத்துக்குள் விழுந்துவிட்டது. அதை உன்னால் 


எடுத்துத் தரமுடியுமா?
"இவ்வளவுதானா? என்னால் முடியுமே,"என்றது தவளை.
இந்த சொறித்தவளையால் அந்தப் பந்தை எடுத்து வரமுடியாது என்று 


நினைத்தாள் இளவரசி.
அதனால் முன்பு சொன்னதையே சொன்னாள்.
"என் தங்கப் பந்தை எடுத்துக் கொடுத்துவிடு. எனக்குச் சொந்தமான 


அனைத்தையும் உனக்குத் தருகிறேன்,"என்றாள் இளவரசி.
"எனக்கு அதெல்லாம் வேண்டாம்; நான் கேட்பதைச் செய்வதாகச் சொன்னால் 


எடுத்துத் தருவேன்,"என்றது தவளை.
"சரி, என்ன வேண்டுமானாலும் கேள். நீ எனக்கு உதவினால் நான் உனக்கு 


உதவுவேன்,"என்றாள் இளவரசி.
"நான் கேட்பது இதுதான். நீ என்னை நேசிக்க வேண்டும். நான் உன்னுடன் 


இருக்கச் சம்மதிக்க வேண்டும்.
நீ சாப்பிடும் தங்கத் தட்டில் நானும் சாப்பிட அனுமதிக்க வேண்டும். 


உன்னுடைய படுக்கையில் நான் படுத்துத் தூங்க அனுமதிக்க வேண்டும். 


இதையெல்லாம் நீ செய்ய ஒத்துக்கொண்டால் நான் உன் பந்தை எடுத்துத் 


தருவேன் என்றது தவளை.
"என்ன திமிர் இந்தச் சொறித் தவளைக்கு!  குளத்தை விட்டு வெளியே வரமுடியாத தவளையின் பேராசையைப் பார்! முதலில் பந்தை எடுத்துத் தருகிறதா பார்ப்போம். இந்தத் தவளை கேட்கும் வாக்குறுதியை தருவதாகச் 
சொன்னால் போச்சு,"என்று மனதில் இளவரசி நினைத்தாள்.
"நீ, மட்டும் என் பந்தை எடுத்துக் கொடுத்துவிடு;நீ கேட்டதையெல்லாம் நான் செய்வேன்,"என்றாள் இளவரசி.
"வாக்குத் தவறக்கூடாது இளவரசியாரே,சொன்னபடி நடக்க வேண்டும், சரியா?"என்றது தவளை.
"வாக்குத் தவறமாட்டேன். சொன்னபடி நடந்துகொள்வேன், நீ என் பந்தை முதலில் எடுத்து வா,"என்றாள் இளவரசி.
தவளை தண்ணீருக்குள் "தொப்" என்ற சத்தம் கிளம்ப உள்ளே போனது. குளத்தின் அடி ஆழம் சென்று தேடி தஙகப் பந்தைக் கண்டுபிடித்தது. அதை மேலே எடுத்து வந்து குளக்கரையில் போட்டது,தவளை.
அவ்வளவுதான், ஓடிப்போய் இளவரசி பந்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள். 
தவளையைப் பற்றிய கவலை இல்லாமல் அரண்மனையை நோக்கிப் போனாள்.
அவள் ஒரு நன்றி கூட சொல்லாமல் போவதைப் பார்த்த தவளைக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது.
"இளவரசியாரே, நில்லுங்கள். நீங்கள் சொன்னபடி நடந்துகொள்ள வேண்டும். 


என்னை உங்களோடு எடுத்துச் செல்லுங்கள். நில்லுங்கள், இளவரசி..."என்று தவளை கத்தியது.
ஆனால், இளவரசி எதுவும் காதில் விழாதது போல வேகமாக நடந்து போய்விட்டாள்.
அன்று இரவு.....
இளவரசி, அரசர்,அரசியாரோடு உணவு உண்ணும் நேரம்.  இளவரசி ஒரு வினோதமான சத்தத்தைக் கேட்டாள்.   "தப்..தப்..சப்...சப்..." அந்த சத்தம் பளிங்கு கல் மாடிப்படிக்கட்டில் இருந்து வந்து சாப்பாட்டுக்
கூடக் கதவு வரை வந்து நின்றுவிட்டது.  மெல்லக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
"என் அருமை இளவரசியே, கதவைத் திறவாய்,
உன் அருமை தவளை இங்கே! கதவைத் திறந்து பார், 
உன்னை நேசிக்கும் ஓர் உயிர் உனக்காக காத்திருக்கிறது! 
சொன்ன வாக்கு தவறுதல் அழகா? குளக்கரையில் நீ
சொன்ன வாக்கு தவறாமல் காப்பாற்ற வேண்டாமா?" - என்று
இனிமையாகப் பாடியது அந்தக் குரல்.
இளவரசி வேகமாகப் போய் கதவைத் திறந்து பார்த்தாள். அங்கே தவளை காட்சியளித்தது.
தவளையை இளவரசி அங்கே எதிர்பார்க்கவில்லை.  
"வாக்கு கொடுத்தபடி நடவாமல் ஏமாற்றிவிட்டு வந்தது சரியா? தவளை கேட்டது.
தவளைக்கு பதில் சொல்லாமல், வேகமாக கதவைச் சாத்திவிட்டு சாப்பாட்டு மேசைக்கு திரும்பினாள் இளவரசி.
இளவரசியின் கலவரமான முகத்தை அரசர் கவனித்தார்.  எதைக் கண்டோ மகள் பயந்து வந்தது போல் இருந்தது அவருக்கு.
"என்னம்மா? என்ன விசயம்? எதையோ கண்டு பயந்துவிட்டாயா?"என்றார் அரசர்.
"ஒரு சொறித்தவளையப்பா அது! இன்று குளத்துக்குள் விழுந்த என் பந்தை அது எடுத்துக் கொடுத்தது.
அதற்கு ஒரு வாக்கு கொடுத்தேன்; அதனால் அது இங்கே வந்து நியாயம் கேட்கிறது,"என்று விபரம் சொன்னாள்.
"என்ன பெண்ணம்மா,நீ! யாருக்கும் நாம் வாக்கு கொடுத்தால் அதன்படி நடக்கவேண்டும். பிறருக்கு நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும். அது தவளையாகவே இருந்தாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமம்மா,"என்று புத்திமதி சொன்னார்.
அப்போது மீண்டும் கதவைத் தட்டும் ஓசையும் தொடர்ந்து தவளை பாடும் பாட்டும் கேட்டது.
"என் அருமை இளவரசியே, கதவைத் திறவாய்,
உன் அருமை தவளை இங்கே! கதவைத் திறந்து பார், 
உன்னை நேசிக்கும் ஓர் உயிர் உனக்காக காத்திருக்கிறது! 
சொன்ன வாக்கு தவறுதல் அழகா? குளக்கரையில் நீ
சொன்ன வாக்கு தவறாமல் காப்பாற்ற வேண்டாமா? -
"அந்தத் தவளையைப் புலம்ப வைத்து விட்டாயே.  அது சரியல்ல;அது
நீ கேட்ட உதவியைச் செய்து கொடுத்தது. அதற்கு பதிலாக தவளை கேட்டதை நீயும் ஒப்புக்கொண்டிருக்கிறாய். அதனால் வாக்கு கொடுத்தபடி கதவைத் திறந்து உள்ளே அழைத்துவா,"என்று அரசர் தன் மகளுக்குச் சொன்னார்.
வேறு வழியில்லாமல் இளவரசி கதவைத் திறந்து தவளையை அழைத்து
வந்தாள். இளவரசி அமர்ந்து சாப்பிடும் நாற்காலியில் தவளை தாவி ஏறியது.
"நீ சாப்பிடும் தட்டு அருகே என்னை உட்கார வை;நானும் சாப்பிட வேண்டும்,"என்றது தவளை.
இளவரசியும் மனமின்றி தவளையை எடுத்து தான் சாப்பிடும் தங்கத் 
தட்டு அருகே வைத்தாள்.  இப்போது இளவரசி சாப்பிடும் தட்டிலேயே
தவளையும் சாப்பிட ஆரம்பித்தது. 
தவளை சாப்பிட்டு முடித்ததும்,"நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன்.
என்னை எடுத்துக்கொண்டு போய் உன் படுக்கையில் படுக்க வை,"என்றது.
வேறு வழி இல்லாமல் இளவரசி தவளையை எடுத்துக்கொண்டு போனாள்.
தன் படுக்கையில் படுக்க வைத்தாள். த‌வ‌ளையும் சுக‌மாக‌ இர‌வு முழுக்க‌
தூங்கிய‌து. 
காலையில் சூரிய‌ வெளிச்ச‌ம் வ‌ந்த‌வுட‌ன் த‌வ‌ளை விழித்துக்கொண்ட‌து.
உட‌னே க‌ட்டிலில் இருந்து கீழே குதித்த‌து. மாடிப்ப‌டிக்க‌ட்டில் இற‌ங்கி
அர‌ண்ம‌னையை விட்டு வெளியேறிய‌து.
த‌வ‌ளை போன‌ பிற‌கு இள‌வ‌ர‌சி விழித்தெழுந்தாள். த‌வ‌ளை அருகில்
இல்லையென்ற‌தும் மிக‌ ம‌கிழ்ந்தாள்,இள‌வ‌ர‌சி.இனி த‌வ‌ளை ப‌ற்றிய‌
க‌வ‌லை இல்லை என்று நினைத்த‌தில் விய‌ப்பு எதுவும் இல்லைதான்.
இர‌வு வ‌ந்த‌து; த‌வ‌ளையும் திரும்ப‌ வ‌ந்த‌து. நேற்றுப் போல‌வே
ச‌த்த‌ம் எழுப்பிக் க‌த‌வைத் த‌ட்டிய‌து த‌வ‌ளை; அடாடா, த‌வ‌ளை
வ‌ந்துவிட்ட‌தே என்று க‌வ‌லைகொண்டாள்,இள‌வ‌ர‌சி. இள‌வ‌ர‌சி
என்ன‌ செய்வ‌து என்று யோசித்துக்கொண்டிருந்த‌போது த‌வ‌ளை
பாட‌த் துவ‌ங்கிய‌து.

"என் அருமை இளவரசியே, கதவைத் திறவாய்,
உன் அருமை தவளை இங்கே! கதவைத் திறந்து பார், 
உன்னை நேசிக்கும் ஓர் உயிர் உனக்காக காத்திருக்கிறது! 
சொன்ன வாக்கு தவறுதல் அழகா? குளக்கரையில் நீ
சொன்ன வாக்கு தவறாமல் காப்பாற்ற வேண்டாமா?" -
த‌வ‌ளையின் பாட‌லைக் கேட்ட‌ அர‌ச‌ர்,"உன் த‌வ‌ளை ந‌ண்ப‌ன்
வ‌ந்துவிட்டான்;போய் அழைத்துவா,"என்று செல்ல‌மாக‌வும்
க‌ண்டிப்போடும் சொன்னார்.
வேறு வ‌ழியின்றி க‌த‌வைத் திற‌ந்து இள‌வ‌ர‌சி, த‌வ‌ளையை அழைத்து வ‌ந்தாள்.
முத‌ல் நாள் போல‌ இள‌வ‌ர‌சியின் த‌ட்டில் சாப்பிட்ட‌து;இள‌வ‌ர‌சியின் ப‌டுக்கையில்
போய் ப‌டுத்துத் தூங்கிய‌து. சூரிய‌ வெளிச்ச‌ம் வ‌ந்த‌வுட‌ன் கிள‌ம்பிப் போய் விட்ட‌து.
மூன்றாவ‌து நாளும் த‌வ‌ளை வ‌ந்து க‌த‌வைத் த‌ட்டி பாட்டுப்பாடிய‌து;இள‌
வ‌ரசியுட‌ன் க‌ட்டிலில் ப‌டுத்து தூங்கிய‌து.  வ‌ழ‌க்க‌ம்போல‌ இள‌வ‌ர‌சியும்
அருகில் ப‌டுத்து தூங்கிவிட்டாள்.

காலையில் கண்விழித்த‌ இள‌வ‌ர‌சி திடுக்கிட்டாள். த‌வ‌ளை இல்லை;ஆனால்
த‌வ‌ளைக்குப் ப‌திலாக‌ ஒரு அழ‌கிய‌ வாலிப‌ன் ப‌டுத்திருந்தான். இள‌வ‌ர‌சியின்
அதிர்ச்சிக்குக் கார‌ண‌ம் அந்த‌ இளைஞ‌ன். அந்த‌ வாலிப‌ன் மிகுந்த‌ அழ‌குள்ள‌
வ‌னாக‌ இருந்தான். அவ‌ன் க‌ண்க‌ளும் முக‌மும் எவ‌ரையும் க‌வ‌ர‌க் கூடிய‌தாக‌
இருந்தான்.

இள‌வ‌ர‌சி பார்த்துக்கொண்டிருந்த‌போதே, வாலிப‌னும் விழித்தெழுந்தான்.
இள‌வ‌ர‌சியாரே,"என‌க்கு உத‌விய‌த‌ற்கு மிக்க‌ ந‌ன்றி,"என்றான்.

"நீங்க‌ள் யார்? நான் உங்க‌ளுக்கு என்ன‌ உத‌வி செய்தேன்?,"என்றாள்.

"இள‌வ‌ர‌சியாரே, நான்தான் த‌வ‌ளையாக இருந்தேன்; ஒரு சூனிய‌க்காரி
என்னை த‌வ‌ளையாக்கிவிட்டாள். இள‌வ‌ரசி, ஒருத்தி அவ‌ள் த‌ட்டில் உன்னைச் சாப்பிட‌ச் செய்ய வேண்டும். மூன்று இர‌வுக‌ள் அவ‌ளுடைய‌ ப‌டுக்கையில் தூங்க‌ வைக்க வேண்டும்; அப்போதுதான் உன் சாப‌ம் நீங்கி இள‌வ‌ர‌ச‌னாவாய்,"என்றாள்.

த‌ங்க‌ப் ப‌ந்தை நீ தொல‌த்துவிட்டு என் உத‌வியைக் கேட்டாய்; நான் உன் 
உத‌வியைக் கேட்டேன். உன்னால், நான் சூனியக்காரியின் சாபத்திலிருந்து
மீண்டேன். அதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். 

நான் வ‌ல்ல‌க்கோட்டை அர‌ச‌னின் ஒரே ம‌க‌ன்! நீ, விரும்பினால் என் த‌ந்தை
யிட‌ம் அழைத்துச் செல்கிறேன். என் த‌ந்தையின் அனும‌தியுட‌ன் நாம் திரும‌ண‌ம் செய்துகொள்வோம். என்ன‌ சொல்கிறாய்?" என்று கேட்டான் இள‌வ‌ர‌ச‌ன்.

"நான் திரும‌ண‌ம் செய்ய‌ப்போவ‌து த‌வ‌ளையை அல்ல‌; இள‌வ‌ர‌ச‌னைத்தானே!
அத‌னால் ச‌ம்ம‌திக்கிறேன்,"என்றாள் இள‌வ‌ர‌சி.

இள‌வ‌ர‌சி, த‌ன் த‌ந்தையிட‌ம் அழைத்துச் சென்று வ‌ல்ல‌க்கோட்டை இள‌வ‌ர‌ச‌னை அறிமுக‌ப்ப‌டுத்தினாள். அவ‌ருக்கும் இள‌வ‌ர‌ச‌னைப் பிடித்திருந்த‌து.

எட்டுக் குதிரைக‌ள் பூட்டிய‌ இர‌த‌ம் த‌யாராக‌ நின்ற‌து;அத‌ன் சேண‌ங்க‌ள்
அனைத்தும் த‌ங்க‌த்தால் செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து. ஒவ்வொரு குதிரையின் 
த‌லையிலும் ஒரு வெண்சிற‌குக‌ள் ஒயிலாக‌ ஆடிய‌து. அந்த‌ இர‌த‌த்தில்
இள‌வ‌ர‌சியும், இள‌வ‌ர‌ச‌னும் வ‌ல்ல‌க்கோட்டைக்குப் பய‌ண‌மானார்க‌ள்.

வ‌ல்ல‌க்கோட்டை அர‌ச‌ரும் அர‌சியும் அர‌ண்ம‌னை வாயிலில் நின்று 
வ‌ர‌வேற்று அழைத்துச் சென்ற‌ன‌ர். அத‌ன் பின் இருவ‌ருக்கும் திரும‌ண‌ம்
வெகு விம‌ரிசையாக‌ ந‌ட‌ந்த‌து. அந்த‌ நாட்டு ம‌க்க‌ள் உற்சாக‌மாக‌ அந்த‌த்
திரும‌ண‌த்தைக் கொண்டாடின‌ர்.



தவளை இளவரசனும் இளவரசியும் வெகு காலம் சந்தோசமாக வாழ்ந்தனர்; இளவரசனின் தந்தையான‌ அரசர் மறைவுக்குப் பின் தவளை இளவரசன் அந்த நாட்டுக்கு அரசர் ஆனார். வல்லக்கோட்டை நாட்டு மக்கள்
ஒரு குறையும் இல்லாமல் அவருடைய ஆட்சியில் வாழ்ந்தனர்
                                  <0>

No comments:

Post a Comment