ஸ்கேண்டி நேவியன் கதை
மலை அடிவாரத்தில் அந்தச் சிறுவனின் வீடு இருந்தது. அவனுக்கு அப்பா இல்லை. அப்பா இருந்தபோது நிறைய சொத்து இருந்தது. இறந்தவுடன் அந்தச் சொத்தை எல்லாம் மலையின் உச்சியில் இருந்தவர் ஏமாற்றி எடுத்துக்கொண்டார். அவர்களிடமிருந்தது ஒரே ஒரு "பசு"மட்டும்தான். அம்மாவும் மகனும் சாப்பாட்டுக்கே சிரமப்பட்டனர்.
மகனை அழைத்துச் சொன்னார். இந்தப் பசுவை அருகிலுள்ள நகரத்தில் விற்று விட்டு வா, என்று அனுப்பினார். சிறுவன் மாட்டின் கழுத்தில் கயிறு கட்டினான். கயிற்றைப் பிடித்துக்கொண்டு நகரத்துக்கு கூட்டிப்போனான். வழியில்
ஒரு மனிதனை சிறுவன் சந்தித்தான். அந்த மனிதன் துணியால் மூடிய ஒரு பொருளை வைத்திருந்தான். அந்த மனிதன்
"எங்கேயப்பா போகிறாய் என்று கேட்டார்.
"இந்தப் பசுவை விற்பதற்காகப் போகிறேன்,"என்றான்.
"ஓ!அப்படியா, அப்ப பசுவை எனக்கு விற்கிறாயா?"என்று கேட்டார் அவர்.
"நீங்கள் எவ்வளவு தருவீர்கள்?"என்றான் இவன்.
"இந்த வெள்ளிப் பானையை உனக்குத் தருகிறேன்,"என்றார் அவர்.
"பசுவிற்குப் பதிலா பானையா? நான் தரமாட்டேன்,"என்றான் சிறுவன்.
அப்போது ஒரு மெல்லிய குரல் கேட்டது, சிறுவனுக்கு. "என்னை வாங்கிக்க, என்னை வாங்கிக்க,"என்று பானையில் இருந்து குரல் வந்தது. உடனே சிறுவனும் பசுவை அந்த மனிதரிடம் கொடுத்தான்.
பானையை வாங்கிக்கொண்டான். பசுவோடு போனவன் பானையோடு வீட்டுக்கு வந்தான்.
"பசுவை எவ்வளவுக்கு விற்றாய்?,"என்று கேட்டார் அம்மா.
"இதோ இந்தப் பானையை வாங்கி வந்தேன்,"என்றான்.
"உனக்கு மூளையே இல்லையா? யாராவது பானைக்காக பசுவை விற்பார்களா?
வெறும் பானையை வைத்து என்ன செய்வது? என்று சத்தம் போட்டார், அவன் அம்மா.
அந்தப்பானையை வாங்கி வெளியே வீசப்போனார். அப்போது என்னை
அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வையுங்கள், என்றது பானை.
பானை பேசியதைப் பார்த்த அம்மாவுக்கு ஒரே ஆச்சரியம். பானை
சொல்லியபடி அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றினார். அடுப்பை மூட்டி
எரிய விட்டார். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது.
"இப்ப நான் போய் உங்களுக்கு சாப்பிடக் கொண்டு வருவேன்,"என்றது பானை.
பானை காற்றில் அப்படியே பறந்து மலை உச்சிப்பக்கம் போனது. மலை உச்சியில்உள்ள பணக்காரர் வீட்டு சமையல் அறைக்குப் போனது பானை. பணக்காரர் மனைவியோ பலகாரங்களைச் சுட்டு, வைக்க பாத்திரம் தேடிக்கொண்டிருந்தார். இந்தப் பாத்திரம் எங்கிருந்து வந்தது? என்று யோசித்தார் அந்தம்மா. பானை நல்லாத்தான் இருக்கு என்று செய்த பலகாரங்களை எல்லாம் அந்தப் பானைக்குள் வைத்தார். அதை நன்றாக
ஒரு மூடியை வைத்து மூடினார். பணக்காரக் கணவரைச் சாப்பிட அழைக்கப் போனார்.
பானை காற்றில் மிதந்து மலை அடிவாரத்தில் உள்ள சிறுவன் வீட்டுக்கு வந்துவிட்டது. அம்மாவும் மகனும் விதவிதமான பலகாரங்களை ருசித்துச் சாப்பிட்டனர்.
அடுத்த நாள் காலையில் பானை சொன்னது. என்னை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள் என்று. அதேபோல சிறுவனின் அம்மா செய்தார்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் காற்றில் மிதந்தவாறு பானை வெளியே போனது.
மலை உச்சியில் பணக்காரரின் ஆட்கள் கோதுமை அறுவடை செய்துகொண்டிருந்தார்கள்.
கோதுமையை பிரித்து ஓரிடத்தில் குவியலாக வைத்திருந்தனர். அந்த இடத்திற்குப் போனது பானை. பானை பெரிய பானையாக தன்னை மாற்றிக்கொண்டது. அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர் அந்தப் பானையில் கோதுமையை எடுத்துக் கொட்டினார். மூட்டைக்
கணக்கில் கொட்டிக்கொண்டே இருந்தார். பானைக்குள் எட்டிப்பார்த்தால் இடம் இருந்துகொண்டே இருந்தது. அங்கிருந்த கோதுமை எல்லாம் இப்போது பானைக்குள்!
அந்த வேலையாள் அங்கிருந்து போனார். உடனே பானை காற்றில் மிதந்து சிறுவனின்வீட்டிற்கு வந்துவிட்டது. சிறுவனின் அம்மா, அந்தக் கோதுமையில் பலகாரங்கள்செய்தனர். ரொட்டி செய்தனர். பானையிலிருந்த கோதுமையை அங்கிருந்த தானியக் கிடங்கில் சேமித்தனர். அந்த வருடத்துக்குப் போதுமான கோதுமை அது.
மறு நாள் காலையில் பானை, தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கச் சொன்னது.
சிறுவனின் அம்மா அப்படியே செய்தார். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் பானைகாற்றில் மிதந்து வெளியே போனது.
பணக்காரர் கட்டுக்கட்டாக பணத்தை வைத்து எண்ணிக்கொண்டிருந்தார்.
பானை அங்கே போய் இருந்துகொண்டது. மற்றொரு அறைக்குப் போய் அங்கிருந்த பணத்தைஎல்லாம் எடுத்து வந்தார். இனி இந்தப் பணத்தை எல்லாம் ஒரே இடத்தில் வைக்க வேண்டும் என்று நினைத்தார். அப்போதுதான் அந்தப் பானையைப் பார்த்தார்,பணக்காரர்.
அடடே, இந்தப் பானையில் எல்லாப் பணத்தையும் வைக்க வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டார். தன் முன் இருந்த பணத்தை எல்லாம் பானைக்குள் எடுத்து அடுக்கினார். பணத்தை வைக்க வைக்க இடம் இருந்துகொண்டே இருந்தது. அவரிடம் வேறு பணமே இல்லை; எல்லாப் பணத்தையும் வைத்துவிட்டார்.
பணக்காரர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பானை காற்றில் மிதந்து
செல்ல ஆரம்பித்தது. பணக்காரர் பானையைத் துரத்திக்கொண்டே ஓடினார்.
பானை அவரை அங்குமிங்குமாக அலைக்கழித்தது. பணக்காரர் கண்ணிலிருந்து மறைந்து சிறுவன் வீட்டிற்கு பானை வந்தது.
"அம்மா, பசுவை யாராவது பானைக்கு விற்பார்களா? என்று கேட்டீர்கள்.
இப்போது பானைதான் நாம் இழந்ததை எல்லாம் மீட்டுக்கொடுத்துள்ளது,"
என்றான் மகன்.
தங்களுக்குச் சொந்தமான பணம் திரும்பக் கிடைத்ததில் அம்மாவும் மகனும் சந்தோசப்பட்டார்கள்.
மறு நாள் காலையில் பானை, தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கச் சொன்னது.
இனிமேல் எதற்கு? எங்களுக்குச் சேரவேண்டியது கிடைத்துவிட்டது. நீ, எங்கும் போக வேண்டாம். எங்களுடனேயே இருந்துவிடு என்று சிறுவனின் அம்மா சொன்னார்,பானையிடம்!
"இனி உங்களுக்கு நான் தேவைப்படமாட்டேன். உங்களை ஏமாற்றி மோசடி செய்தவருக்கு ஒரு பாடம் கற்பிக்கப் போகிறேன். எனவே நான் சொன்னபடி செய்யுங்கள் என்றது பானை.
சிறுவனின் அம்மாவும் அப்படியே செய்தார். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் பானை காற்றில் மிதந்து வெளியே போனது.
பணக்காரர் கண்ணில் படும்படியாக பானை போனது.
"என் பணத்தைத் திருடிக்கொண்டு போன பானை இதுதான்...!"என்று
பணக்காரர் கத்தினார். பானையைப் பிடித்து கையை விட்டு பணத்தைத்
தேடினார். பணம் தட்டுப்படவில்லை. பணக்காரர் தன் தலையை உள்ளே
நுழைத்து பணம் இருக்கிறதா என்று பார்த்தார். பணம் எதுவும் இல்லை.
அவரால்,தலையை வெளியே எடுக்க முடியவில்லை.
பானை காற்றில் மிதந்து சென்றது. பணக்காரர் ஏதேதோ சொல்லிக்
கத்தினார். வெளியே எதுவும் கேட்கவில்லை. பானை காடு,மலை,கடல்
எல்லாம் தாண்டிப் போய்க்கொண்டே இருந்தது.
சிறுவர் சிறு கதைகள்
Tuesday, February 28, 2012
Tuesday, February 21, 2012
<<>>சட்கோ<<>>
சட்கோ
ரஷ்யச் சிறுகதை

ரஷ்யச் சிறுகதை
ரஷ்யாவின் துறைமுக நகரம் "நவ்காரட்." வால்கா நதி நகரம் என்றுகூட சொல்லலாம். மாஸ்கோவிற்கும் பீட்டர்ஸ் பர்க் நகரத்துக்கும்
இடையிலான ஒரு பழைய நகரம். வணிகம் செழித்து வளர்ந்த நகரமும் கூட. பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக்கொண்ட நகரம் அது. இசைக் கலைஞன்,
இளைஞன் "சட்கோ."
சட்கோ கூஸ்லி எனப்படும் இசைக்கருவியை
வாசிப்பதில் வல்லவன். 12 கம்பி நரம்புகளைக்கொண்ட
கூஸ்லியை சட்கோ வாசிக்கும் விதமே அலாதியானது.
பணக்காரர் அல்லது பிரபுக்களில் ஒருவர் சட்கோவின்
வீட்டுக்கு ஆளனுப்பி கூஸ்லி வாசிக்கச் சொல்லுவார்கள்.
அது விருந்து நடக்கும் இடமாக இருக்கலாம்;திருமணம்
போன்ற விசேசம் நடக்கும் இடமாகவும் இருக்கும்.
பிரபுக்கள் கூடிவிட்டால் கூப்பிடு சட்கோவை என்பார்கள்.
சட்கோவும் கூஸ்லியை தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவான்.
சட்கோவின் விரல்கள் கூஸ்லியில் விளையாடும். அடுத்த
சில நிமிடங்களில் சட்கோவின் இசைக்கு ஏற்ப அனைவரும்
நடனமாடத் துவங்கிவிடுவார்கள்.
பணக்காரப் பிரபுக்களாக இருந்தாலும் சில்லறைக்காசுகளைத்தான்
போடுவார்கள்,இவனுக்கு! சாப்பாடு அங்கேயே கிடைத்துவிடும்.
அவனுக்கு வேறு என்ன வேண்டும்? அவனுடைய நண்பர்கள்
அடிக்கடி கேட்பார்கள். சில்லறைக் காசுகள்தான் உனக்கு கிடைக்கிறது. அதைகொண்டு எப்படி உயிர் வாழ்கிறாய்? என்பதுதான் அந்தக் கேள்வி.
"நான் ஒருத்தன் தானே, அதற்கு இதுவே போதும்,"
என்பான். நாள்தோறும் ஒருத்தர் விதவிதமான விருந்துகளுக்கு
போகமுடியுமா? விருந்துக்கு போகும் இடங்களில் நல்ல
விருந்தைக் கொடுக்கிறார்கள். எனக்கு சாப்பாட்டுப் பிரச்னை
என்பதே இல்லை.
என் இசையை பணக்காரர்களும், பிரபுக்களும் இரசிக்கிறார்கள்.
மகுடியின் நாதம் கேட்டு ஆடும் பாம்பாக அவர்கள் ஆடி
சந்தோசப்படுவது எனக்குப் பெருமைதானே.
இந்தப் பெருமை உலகில் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அவர்கள் வீசி
இந்தப் பெருமை உலகில் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அவர்கள் வீசி
எறியும் சில்லறைக்காசுகள் என் கைச் செலவுக்கு," என்று
சட்கோ எதார்த்தமாகச் சொல்லுவான். ஆனாலும் இதுதான்
அவன் வாழ்க்கை!
பெரும் பணக்காரர்கள் ஒருபுறம், இன்னொரு புறம் இலவசமாக
எல்லாம் கிடைக்கிறது. என் நகரத்தை நினைத்தால் எனக்குப்
பெருமிதமாக இருக்கிறது என்றும் சொல்வான்.
அனேக நாடுகளிலிருந்து வர்த்தகர்கள் "சந்தைச் சதுக்க"த்தில் கூடுவார்கள்.
நீண்ட வரிசைகளில் அவர்கள் கடைகளுக்கு முன் நிற்பதை அவர்கள்
கொண்டுவந்ததை இவர்களிடம் கொடுப்பார்கள்; அதற்கு சரிசமமாக
இவர்களிடம் வேண்டிய பொருட்களை வாங்குவார்கள். இத்தாலி,
நோர்வே,பெர்சியா என்ற பல கலப்புக்குரல்களைக் கேட்காமல்
ஒருநாளும் சட்கோ அந்தச் சதுக்கத்தைத் தாண்டியதில்லை.
அப்படியே கொஞ்சம் கீழிறங்கி நடந்தால் துறைமுகம் வந்துவிடும்.பயணிகள்
கப்பல்கள், சரக்குக்கப்பல்கள் போவதும் வருவதும் கண்கொள்ளாக்
காட்சியாக இருக்கும். நிற்கும் கப்பல்களிலிருந்து மரங்கள்,
தானியங்கள்,மட்பாண்டங்கள், வாசனை திரவியங்கள்,நறுமணப்பொரு ட்கள்,
உலோகத் தகடுகள் கப்பல்களிலிருந்து இறக்கப்படுவதும் ஏற்றப்படுவதும்
நடந்துகொண்டே இருக்கும்.
அப்படியே வேடிக்கைபார்த்துக்கொண்டே வால்கா நதியின் குறுக்கே செல்லும் பிரம்மாண்டமான பாலத்தில் நடக்க சட்கோவுக்கு மிகவும் பிடிக்கும்.
அப்படியே வேடிக்கைபார்த்துக்கொண்டே வால்கா நதியின் குறுக்கே செல்லும் பிரம்மாண்டமான பாலத்தில் நடக்க சட்கோவுக்கு மிகவும் பிடிக்கும்.
பாலத்தின் இரும்புப் பாளங்கள் ஊடாக வரும் சூரியக்கதிர்கள்!
தங்கமாய்த் தகதகக்கும் அந்தக் கதிர்கள் இவனுக்காகவே
வானத்திலிருந்து இறங்கி வருவதாக கற்பனை செய்து
அதனைப் பிடிக்க முயல்வான்.
இத்தகைய தருணங்களில் உலகத்தில் எங்காவது "நவ்காரட்"
நகரம் மாதிரி ஒரு நகரம் இருக்குமா? இருக்கவே இருக்காது
என்று அவனுக்குள் சொல்லிக்கொள்வான்.
கூஸ்லி வாசிக்காத நாட்களில் தனிமையில் தவிப்பதாக உணர்வான்.
கூஸ்லி வாசிக்கும்போது இவனது இசைக்கு ஏற்ப சில பணிப்பெண்களும்
ஆடுவது உண்டு. அப்படி ஆடுபவர்கள் இவனிடம் வரும்போது
சிரிப்பார்கள். இவனும் புன்னகைத்து வைப்பான். இவனோ ஏழை!
அவர்களோ வசதியானவர்கள். இவன் ஏழையாக இருப்பதாலேயே
இவனைத் திருமணம் செய்ய ஒருவரும் முன்வரவில்லை.
ஒருநாள் அகண்டு பரந்து ஓடும் வால்கா நதியோரம் நடந்துகொண்டிருந்தான்,
சட்கோ. அவனது முகம் வருத்தம் நிரம்பிப்போயிருந்தது. நதிக்கரையில் வழக்கமாக உட்காரும் இடம் வந்தது. உட்கார்ந்தான். கூஸ்லியை எடுத்து மடியில் வைத்துக்கொண்டான்.
நதி அலைகள் கரை மணல்களைக் கடத்தும் வேலையைச் செய்து
கொண்டிருந்தது. நிலா அனுப்பிய ஒளியில் வால்கா நதிக்கு கூடுதல்
அழகைக் கொடுத்தது. எட்டாத வட்ட நிலா அலைகளில் பட்டுத் தட்டுத்
தடுமாறி மிதப்பதையும் கொஞ்சம் இரசித்தான்.
"என்னருமை வால்கா நதியே!உனக்கு ஏழை,பணக்காரன் எல்லாம் ஒன்றுதான்!
ஆனால் நீ மட்டும் ஒரு பெண்ணாயிருந்தால் உன்னையே திருமணம்
செய்து நான் விரும்பும் இந்த நகரத்திலேயே வாழ்வேன்," என்று வாய்விட்டுச்
சொன்னான்,சட்கோ.
அடுத்த நொடி,"ஒரு சோக இழையை தன் குஸ்லியில் மீட்டினான்.தொடர்ந்து
ஒரு சமாதான கீதம் ஒலித்தான்; அது முடிந்ததும் ஒரு சந்தோச கீதம்
மீட்டினான். வால்கா நதிக்கே புல்லறிப்பு ஏற்பட்டிருக்கவேண்டும். கூஸ்லியின்
நாதத்தை அலைகள் உள்வாங்கிக்கொண்டு ஓடுவது போலிருந்தது.
திடீரென்று.....
கடல் கொந்தளித்தது. ஆள் உயரத்துக்கு அலை எழும்பியது. சட்கோ பயந்து,"ஆகா, இன்றைக்கு கடலரக்கனுக்கு நான் உணவாகப் போகிறேனா?"என்று கத்தினான். சட்கோ எழுந்து கரைப்பக்கம் ஓடத் துவங்கியபோது,"சட்கோ ஓடாதே நில்!,"என்ற குரல் கேட்டது. சட்கோ நின்று திரும்பிக் கடலைப் பார்த்தான்.
அங்கே....
தண்ணீருக்குள்ளிருந்து ஒரு இராட்சச உருவம் மெல்ல மேலே வந்து கொண்டிருந்ததைக் கண்டான்,சட்கோ.
தலையில் முத்துக்களால் ஆன கிரீடம் ஒன்று இருந்தது. உடம்பெல்லாம் கடற்பாசியால் ஆன உடை.
சட்கோவைப் பார்த்து அந்த உருவம் ,"இசை ஞானியே, நான் கடல் அரசன்....உன் இசை கேட்டு இங்கு வந்தேன்,"
என்றது.
" இந்த நதியின் இளவரசி வால்கா என் மகள். அவளைப் பார்ப்பதற்காக வந்திருந்தேன். அப்போது உன் இசையை நதியின் அடி ஆழத்தில் நாங்களெல்லாம் கேட்டு மகிழ்ந்தோம். யார் அந்த இசை ஞானி என்று பார்க்கவே யான் இங்கு வந்தேன். உன்னுடைய அற்புதமான இசைக்கு என் கடலளவு பாராட்டுக்கள்"என்றார் கடலரசன்.
"மிக்க நன்றி, அரச பிரபு,"என்று சொல்லி தலை தாழ்த்தி கடலரசனை வணங்கினான், சட்கோ.
"நான் எனது அரண்மனைக்கு விரைவில் செல்லப் போகிறேன். அங்கு ஒரு நாள் வந்து உன் இசையை எனக்காக இசைக்க வேண்டும் என்பது என் ஆசை,"என்றார் கடலரசன்.
"கண்டிப்பா வந்து இசைப்பேன். ஆனால், கடலில் உங்கள் அரணமனை எங்கே இருக்கிறது? நான் எப்படி அங்கு வருவது?" என்று சட்கோ சட்டென்று கேட்டான்.
"கடலுக்கு அடியில்தான் என் அரண்மனை, அதிலென்ன சந்தேகம்? அரண்மனைக்கு வரும் வழியை உன்னால் கண்டுபிடித்து வரமுடியும். உன் இசைக்கான பரிசை இப்போதே உனக்கு நான் வழங்குகிறேன்,"என்று
கடலரசன் சொன்னார்.
அடுத்த நொடி வால்கா நதியிலிருந்து ஒரு பெரிய மீன் துள்ளிவந்து சட்கோவின் காலடியில் வந்து வீழ்ந்தது.
அதன் செதில்கள் எல்லாம் தங்கமாக மின்னியது. துள்ளிய மீன் திடீரென விறைத்து மீனே தங்கமாக மாறியது.

"ஈரேழு கடல்களுக்கும் சக்கரவர்த்தியே! உங்களின் தாராளமான வள்ளல் தன்மைக்கு என் நன்றியும் வணக்கமும்," என்று சொல்லி சட்கோ குனிந்து வணங்கினான்.
"என்னைப் புகழ வேண்டாம். தங்கத்தை விட இசை விலை மதிப்பில்லாதது. உன் இசையை இந்த உலகத்தில் உள்ளோருக்கு மதிக்கத் தெரியவில்லை; தெரிந்திருந்தால் இந்நேரம் நீ உலகப் பணக்காரனாகி இருப்பாய். நான்
இசையை மதிப்பவன்; அதனால்தான் நானே உன்னைத் தேடிவந்தேன். சரி நான் வருகிறேன்,"என்று சொல்லி வால்கா நதியில் கடல் அரசன் மறைந்து போனார்.
சட்கோவுக்கு அந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து மீள வெகு நேரமானது.
அடுத்த நாள்....
சட்கோ, சதுக்கச் சந்தைக்குச் சென்றான். திறந்திருந்த கடைகளில் பெரிய கடை ஒன்றுக்குப் போனான்.
அந்த வியாபாரிக்கோ பேராச்சரியம். சட்கோவே எதிர்பாராத பெருந்தொகை கிடைத்தது.
வீட்டுக்குப் போனான். தனக்கு வேண்டிய பணத்தை எடுத்துக்கொண்டு மீதியை தனது பழைய மரப்பெட்டியில் வைத்துவிட்டு துறைமுகம் நோக்கிக் கிளம்பினான்,சட்கோ.
கடலரசன் அரண்மனை பால்டிக் கடலில்தான் இருக்க வேண்டும். அதுதான் ஆழமான கடல். அவன் உள்மனம் அதுவே சரி என்று சொல்ல தீர்மானித்துவிட்டான்,சட்கோ. அன்றே புறப்படும் கப்பல் எது என்று தேடிப்பார்த்தான்.
லடோகா நதிவழியாக ஃபின்லாந்து வளைகுடாவில் நுழைந்து பால்டிக் கடல் தாண்டிப் பயணப்படும் கப்பலைக் கண்டுபிடித்துப் பயணச் சீட்டை வாங்கினான்.
வழிநெடுக யோசித்துக்கொண்டே போனான் சட்கோ. கடலரசன் அரண்மனை எந்த இடம் என்று கடலில் எப்படிக் கண்டு பிடித்துப் போவது? என்பதே அவன் சிந்தனை.
கரை தெரியாக் கடலில் கடல் அலைகள் உறுமும் சத்தம் தவிர எதுவும் தெரியாத தண்ணீர் பிரதேசத்தில் கப்பல்பயணப்பட்டுக்கொண்டிருந்தது. அமைதியான கடற்பரப்பில் கப்பலை அதன் தலைவன் நங்கூரம் பாய்ச்சி
நிறுத்தினார்.
கப்பலின் மேல் தளத்தில் நின்றுகொண்டு பயணிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். எங்கு திரும்பினாலும்
தண்ணீர்....தண்ணீர்...தண்ணீர். தூரத்தில் செல்லும் கப்பல்கள் புள்ளிகள் போல் தெரிந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மீன்கள் தண்ணீருக்கு மேல் தலைகாட்டிக்கொண்டிருந்தது.
தண்ணீர்....தண்ணீர்...தண்ணீர். தூரத்தில் செல்லும் கப்பல்கள் புள்ளிகள் போல் தெரிந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மீன்கள் தண்ணீருக்கு மேல் தலைகாட்டிக்கொண்டிருந்தது.
சட்கோவுக்கு திடீர் என்று ஒரு யோசனை வந்தது. குஸ்லியை வாசித்தால் ஒருவேளை கடலரசன் எதாவது வழிகாட்டக்கூடும் என்று நினைத்தான். கப்பலின் கீழ்தளத்துக்கு ஓடி கூஸ்லியை எடுத்து வந்து வாசித்தான்.
"ஒரு சோக இழையை தன் கூஸ்லியில் மீட்டினான்.தொடர்ந்து
ஒரு சமாதான கீதம் ஒலித்தான்; அது முடிந்ததும் ஒரு சந்தோச கீதம்
மீட்டினான்.
அப்போது......
திடீரென ஒரு புயல் போல பெருங்காற்று. கப்பலையே கவிழ்த்துவிடும்போல சாய்ந்தாடியது.
பயணிகள் அலறியடித்துக்கொண்டு இங்குமங்கும் ஓடினார்கள். நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்தால் நம் கதி என்ன ஆகுமோ என்று சிலர் பயத்தில் கடவுளைக் கும்பிடத் துவங்கினர்.
அப்போது கப்பல் தலைவன்,"கடலுக்கெல்லாம் அரசன் வாழும் இடம் இதுவாகத்தான் இருக்கவேண்டும்,"என்று கத்தினார்.
இதைத்தானே சட்கோ எதிர்பார்த்தான். உடனே எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் கூஸ்லியை மட்டும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கப்பலின் மேல் தள கைப்பிடியைப் பிடித்து ஏறினான்.
கப்பல் தலைவன்,"ஏய்,யாராவது அந்த ஆளைப் பிடிச்சு நிறுத்துங்கப்பா,"என்று கத்தினார்.
ஆனால், அதற்குள் சட்கோ சட்டென்று கடலை நோக்கிக் குதித்துவிட்டான். கடலின் ஆழத்துக்குப் போய்க்கொண்டே இருந்தான். ஒருவழியாக கடலின் அடி ஆழம் சென்றபோது அவன் நின்ற இடம் வெள்ளை நிற பிரம்மாண்ட அரண்மனை!
பவளத்தால் ஆன கதவைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் சட்கோ.
அங்கே அரண்மனையின் பிரம்மாண்டமான கதவுகள் தென்பட்டது. அதன் அருகில் சென்றதும் கதவுகள் தானாகத் திறந்து வழிவிட்டது.
சட்கோ நடந்து போகப்போக ஒவ்வொரு கதவாகத் திறந்து கொண்டே போனது. ஒரு பிரம்மாண்டமான அறையைக் கடந்த சட்கோ நின்றான். அவனது வலது பக்கத்தில் இருந்த பெரிய கலையரங்க நுழை வாயில்தெரிந்தது.
வெளிப்புறமும் உட்புறமும் கடற் பாசிகளாலும் செடிகொடிகளாலும் வரவேற்புத் தோரணங்கள்கட்டப்பட்டிருந்தது. கடற்செடிகளின் வண்ணவண்ண மயமான பூக்கள் விழா மேடையை அலங்கரித்திருக்க பார்க்கவே சட்கோவிற்கு ஆனந்தமாக இருந்தது.
வெளிப்புறமும் உட்புறமும் கடற் பாசிகளாலும் செடிகொடிகளாலும் வரவேற்புத் தோரணங்கள்கட்டப்பட்டிருந்தது. கடற்செடிகளின் வண்ணவண்ண மயமான பூக்கள் விழா மேடையை அலங்கரித்திருக்க பார்க்கவே சட்கோவிற்கு ஆனந்தமாக இருந்தது.
அங்கிருந்து சட்கோ சற்றுத் தூரத்தில் கலையரங்கம் ஒன்றின் நுழை வாயில் தென்படவே அதை நோக்கி நடந்தான். கலையரங்கம் முழுக்க அரச விருந்தினர்கள், பார்வையாளர்கள் என்று நிரம்பி வழிந்து இருந்தன.
கடல் என்றால் மீன்கள் இல்லாமலா? கலையரங்க நுழைவாயிலில் இருந்து மேடை வரை கடற்கன்னிகள் இருபுறமும் வரிசைவரிசையாக நின்று மலர் தூவி சட்கோவை வரவேற்றனர்.
கடற்குதிரைகள்,கடற்பசுக்கள்,தி மிங்கிலங்கள்,சுறா மீன்கள், நட்சத்திரமீன்கள், நண்டுகள்,ஆமைகள், லாப்ஸ்டர்கள், ஈல் மீன்கள், தட்டையான பெரிய திருக்கை மீன்கள், அயிரை மீன் போன்ற பொடிப்பொடியான மீன்கள் கூட்டம் என்று அந்த அரங்கம்நிறைந்து காணப்பட்டது.
கடற்குதிரைகள்,கடற்பசுக்கள்,தி
கடல் அரசனும் அரசியும் கடற்கிளிஞ்சல் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தனர். அருகில் அரசனின் மகள்கள் அமர்ந்திருந்தனர். அந்த இடம் வரை இரு புறமும் கடற்கன்னிகள் நின்றுகொண்டு வண்ண வண்ணக் கடற்பாசிப்பூக்கள் தூவி "சட்கோ"வை வரவேற்றனர்.
"மிகச் சரியான நேரத்திற்கு வந்திருக்கிறீர், இசைக்கலைஞரே! உம் வரவு எமக்கெல்லாம் மிகுந்த மகிழ்வை அளிக்கிறது. வருக!வருக!! தருக! தருக!! நல்லிசை தருக,"என்றார் கடல் அரசர்.
அமைச்சர் ஒருவர் சட்கோவை அழைத்துச் சென்று அரசரின் அரியணைக்கு அருகில் அமரவைத்தார்.
"ம்ம்ம்..நடக்கட்டும்..நாட்டி யம் முதலில்! நம் விருந்தினரைக் கெளரவிப்போம்,"என்றார் அரசர்.
அற்புதமான நட்டியம். ஆடியது கடற்குதிரை மற்றும் கடல் தேள் குழுவினர்.
சட்கோ எழுந்து ஒரு சந்தோச இசையை வாசித்தான். அந்த இசை மழையில் நனைந்த கடல் மீன்கள் இசைக்கு ஏற்றபடி ஆடத்துவங்கியது. டால்பின்களும் திமிங்கிலங்களும் அந்த அரங்கை அதிரவைக்கும் வகையில் ஆடின. திடீரென்று அரசர் எழுந்து,"இந்த இசை எனக்குப் பிடித்திருக்கிறது. இந்த இசைக்கு நான் ஆடியே ஆக வேண்டும்," என்று சொல்லி எழுந்து ஆடத் துவங்கிவிட்டார்.
அரசர் ஆடத் துவங்கியதும் நதி மங்கையர்களும் ஆட ஆட்டம் களை கட்டியது. அரசரோ,"ம்...இந்த இசையைஇன்னும் வேகமாக வாசியுங்கள் சட்கோ...இன்னும் வேகமாக....,"என்று மிகப் பயங்கரமான வேகத்தில் சுழன்று சுழன்று ஆட ஆரம்பித்துவிட்டார்.
ஒரு கட்டத்தில் சட்கோவை உடனே வாசிப்பதை நிறுத்தும்படி அரசி உத்தரவிட்டாள். அரசர் ஆடும் ருத்ர தாண்டவத்தால் கடலின் மேற்பரப்பில் கப்பல்கள் எல்லாம் கவிழ்ந்து போகும் அபாயம் உள்ளது. படகுகள்
எல்லாம் பொம்மைகள் போல ஆடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலை நீடிக்கக்கூடாது என்றார்.
உடனே சட்கோ நிலைமையைப் புரிந்துகொண்டு கூஸ்லியின் ஒரு இழையைப் பலமாக இழுத்தான். அது அறுந்துவிட்டது. "மேன்மைதாங்கிய அரசரே தங்கள் வேகத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் நரம்பு அறுந்துவிட்டது,"என்று சொன்னான் சட்கோ.
"வெட்கம்...வெட்கம்...சட்கோ, இன்று நாள் முழுவதும் நான் உன் இசைக்கு ஆடுவேன். இப்படி உன் இசைக்கருவி கெடுத்துவிட்டதே. இழை அறுந்துபோனால் நீங்கள் என்ன செய்ய முடியும்? நீங்கள் ஒரு அற்புதமான இசைக்கலைஞர். உங்களை நான் இழக்க விரும்பவில்லை. என் மகள்களில் ஒருத்தியை உங்களுக்குத் திருமணம் செய்து வைத்து இங்கேயே வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்,"என்றார் அரசர்.
"மாட்சிமை பொருந்திய அரசே! இந்தச் சமுத்திரத்தில் உங்கள் வார்த்தைகள்தான் சட்டம்;ஆனால் இது என்னுடைய வீடு அல்லவே. நான் விரும்புவது என் நவ்காரட் நகரமல்லவா,"என்று மிகப்பணிவாகச் சொன்னான் சட்கோ.
"சொல்லாதீர்கள்,இன்னொரு முறை எனக்கு கோபம் வரும். என்னருமை மக்களே இப்படி வந்து நில்லுங்கள்,"என்று அரசர் உத்திரவிட வரிசையாக வந்து நின்றார்கள் இளவரசிகள்.
சட்கோ பார்த்தான். ஒவ்வொருவரும் அழகாக இருந்தனர். ஒருவரை விட இன்னொருவர் அழகாக இருந்தனர்.
"என்ன இசைஞானியாரே தேர்வு செய்வதில் சிக்கலா? அப்படியானால் உங்களுக்குப் பொருத்தமான இளவரசியை நானே காட்டுகிறேன். வால்கா.."என்று அழைக்கவும் செய்தார் அரசர்.
வால்கா அரசரின் அருகே மகிழ்ச்சியோடு வந்து நின்றாள்.
வால்காவின் பச்சை நிறக் கண்கள் பளபளப்பாக இருந்தது. அவள் முகத்தில் சிரிப்பு.
"நீங்கள் என் கரையோரம் உட்கார்ந்து நீங்கள் இசைத்த இசைக்கு முதல் ரசிகை நான். உங்களையே திருமணம் செய்து வாழப்போகிறோம் என்பதே சந்தோசமாக இருக்கிறது,"என்றாள் வால்கா.
"வால்கா...உன் நதியைப் போலவே நீயும் அழகு!,"என்று சட்கோ சொன்னான்.
அந்த நேரத்தில் கடல் அரசி அவன் காதில் ஒரு இரகசியம் சொன்னாள். "நீங்கள் மிக நல்லவர் சட்கோ. நீங்கள் உங்கள் நகரத்துக்கு திரும்பிப் போக வேண்டும் என்றால் என் மகள் வால்காவைத் தொடாதீர்கள். தொட்டால் என்றைக்கும் நீங்கள் உங்கள் நவ்காரட் நகரத்தைப் பார்க்கவே முடியாது. இதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்,"என்றார்.
அன்று இரவு சட்கோ மெத்தையில் படுத்து இருந்தான். வால்கா அழகானவள்; அவளோடு நான் ஏன் வாழக்கூடாது? அப்புறம் என் நகரம்..அந்த வாழ்க்கை அவ்வளவுதானா? அரசி சொன்னதையும் யோசித்துக்கொண்டே இருந்தான்.
இளவரசி வால்கா,"ஏன், என்னைத் தொடாமல் இருக்கிறீர்கள்?" என்று கேட்டாள்.
எங்கள் நவ்காரட் நகர பழக்கம்; திருமணம் ஆன முதல் நாள் மனைவியைத் தொடமாட்டார்கள்,"என்றான் சட்கோ.
"முதல் நாள் தானே! நாளைக்குத் தொடுவீர்கள், இல்லையா?"என்றாள் வால்கா.
"ஆமாம், நாளை தொடுவேன்,"என்றான் சட்கோ!
காலையில் சட்கோ கண்விழித்தான். சூரியக் கதிர்கள் அவன் முகத்தில் பிரகாசமாகப் பட்டது. அவன் அருகில் வால்கா இல்லை! நான் எங்கிருக்கிறேன்? அவன் வால்கா நதிக்கரையோரம் இருந்தான். அவனுக்குப் பின்னால் நவ்காரட் நகரத்தின் பெருஞ் சுவர் இருந்தது.
"ஆ! என் சொந்த நகரத்துக்கு வந்துவிட்டேன்,"என்று வாய்விட்டுச் சொன்னான், சட்கோ. அவன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. ஆனால் அவன் கண்கள் இரண்டு செய்திகள் சொல்லுவது போலிருந்தது.
சொந்த நகரத்துக்கு திரும்பிய சந்தோசம் கண்களில் மின்னியது. அதே நேரத்தில் இளவரசி வால்காவை இழந்துவிட்டோமே என்ற ஏக்கமும் தெரிந்தது. ஒருவேளை சட்கோவின் கண்ணீரிலும் இந்த இரண்டும் வெளிப்பட்டிருக்குமோ!
சொந்த நகரத்துக்கு திரும்பிய சந்தோசம் கண்களில் மின்னியது. அதே நேரத்தில் இளவரசி வால்காவை இழந்துவிட்டோமே என்ற ஏக்கமும் தெரிந்தது. ஒருவேளை சட்கோவின் கண்ணீரிலும் இந்த இரண்டும் வெளிப்பட்டிருக்குமோ!
அந்த வருடம் சட்கோவுக்கு அதிர்ஷ்டமான வருடம் என்றே சொல்லவேண்டும். அவன் வீட்டில் விட்டுச் சென்ற தங்க மீன் விற்ற பணத்தை வைத்து ஒரு கப்பல் வாங்கினான்.
அதில் நவ்காரட்டின் சந்தைச் சதுக்கத்தில் இருந்து விலை மதிப்புள்ள பொருட்களை நிரப்பினான். தூர நாடுகளுக்கு கப்பலில் போய் வணிகம் செய்தான். அந்த வருடத்திலேயே நவ்காரட்டின் மிக முக்கியமான பிரபுக்களில் ஒருவனாகிவிட்டான்.
அதில் நவ்காரட்டின் சந்தைச் சதுக்கத்தில் இருந்து விலை மதிப்புள்ள பொருட்களை நிரப்பினான். தூர நாடுகளுக்கு கப்பலில் போய் வணிகம் செய்தான். அந்த வருடத்திலேயே நவ்காரட்டின் மிக முக்கியமான பிரபுக்களில் ஒருவனாகிவிட்டான்.
அந்த நகரத்தின் பெரு வணிகனின் மகளை திருமணம் செய்தான். நகரத்தில் அடிக்கடி விருந்துகொடுப்பவர்களில் ஒருவன் ஆனான். அந்த விருந்தில் கூஸ்லியை சட்கோ வாசிக்க அவன் குழந்தைகள் நடனமாடுவதை
இரசித்தான்.
இப்போது வயாதாகிவிட்டது சட்கோவிற்கு! இருந்தாலும் அகண்டு பரந்து ஓடும் வால்கா நதியோரம் நடந்துபோவான். நதிக்கரையில் வழக்கமாக உட்காரும் இடம் வந்ததும் உட்காருவான். கூஸ்லியை எடுத்து மடியில் இசைக்கத் துவங்கிவிடுவான்.
எப்போதும் போல நதி அலைகள் கரை மணல்களைக் கடத்தும் வேலையைச் செய்து கொண்டிருக்கும். நிலா அனுப்பிய ஒளியில் வால்கா நதிக்கு கூடுதலான அழகாகத் தெரியும்.
எட்டாத வட்ட நிலா அலைகளில் பட்டுத் தட்டுத் தடுமாறி மிதப்பதையும் தவறாமல் இரசிப்பான்.
சில நேரங்களில் இவன் இசை கேட்டு தண்ணீருக்கு மேல் வந்து மிதப்பது இளவரசி வால்காவின் தலையாகவும் இருக்கலாம்;இல்லை அந்த எட்டாத அழகு வட்ட நிலாவாகக்கூட இருக்கலாம்!
Sunday, February 12, 2012
<<>>ஜோஜியும் பூனையும்<<>>
ஜோஜியும் பூனையும்
ஜப்பான் நாட்டுக் கிராமியக் கதை
ஜப்பான் நாட்டில் ஒரு சின்ன ஊர். சின்ன ஊரில் ஒரு பெரிய குடும்பம்.
பண்ணையார் குடும்பம் என்றால் எல்லோருக்கும் தெரியும். பண்ணையாருக்கு ஆறு மகன்கள்;ஆறு மகள்கள். அந்த ஆறில் ஒருவன் பெயர் ஜோஜி.
ஜோஜி நன்றாக படங்கள் வரைவான்.உடனே எல்லா படங்களையும்
வரையக்கூடியவன் என்று எண்ணிவிடாதீர்கள். அவன் வரைவது
பூனை...பூனை...பூனைப் படங்கள்தான். வேறு எந்த வேலையும் செய்ய
மாட்டான் ஜோஜி! கையில் குச்சி என்று எதாவது கிடைத்தால் போதும்.
மாட்டுச் சாணத்தைத் தொட்டுக்கூட ஒரு பூனையை வரைந்துவிடுவான்.
அவன் வரைவது எல்லாமே பூனைதான்.
பூனை.....பூனை மேலும் பூனைகள்! சிறிய பூனைகள், பெரிய பூனைகள்,
ஒல்லியான பூனைகள்,குண்டான பூனைகள்,பூனைகள்...பூனைகள்.. .பூனைகள்,
பூனைகள்...பூனைகள்!
அவனுடைய அப்பா ஒரு நாள் ஜோஜியைக் கூப்பிட்டு,"உடனே நீ பூனை
படம் வரைவதை நிறுத்தனும். நீ பூனையா வரைஞ்சுகிட்டு இருந்தா நீ
என்னைக்கு ஒரு விவசாயியாவது?" என்று சத்தம் போட்டார்.
"மன்னிச்சுகங்க அப்பா,நான் வரைவதை நிறுத்த முயற்சி பண்றேன்,"
என்றான், ஜோஜி.
ஜோஜியும் முயற்சி பண்ணினான். இனிமே வரையக்கூடாது என்று
சொல்லிக்கொள்வான். பண்ணையில் எங்காவது ஒரு பூனையைப் பார்த்து
விட்டால் அவ்வளவுதான். அவன் உறுதி தளர்ந்துவிடும். உடனே அந்தப்
பூனையை வரைய உட்கார்ந்துவிடுவான்.
ஜோஜி நிச்சயமா ஒரு விவசாயி ஆக மாட்டான். அவனோட அண்ணன்
தம்பிகள் எல்லாம் எனக்கு நிலத்துல ஒதவி ஒத்தாசையா இருக்காங்க.
இவன் மட்டும் பூனை...பூனைன்னு அலையறான்,"என்று விவசாயி தன்
மனைவியிடம் சொன்னான்.
"அவனோட தலையெழுத்து கோவில் அர்ச்சகராஆகனும்ன்னு இருக்கோ
என்னமோ! நீங்க ஏன் அவனை கோயிலுக்கு கூட்டீட்டுப் போகக்கூடாது?"
விவசாயி தன் மகனை அருகிலுள்ள கிராமக் கோவிலுக்கு அழைத்துச்
சென்றார். அங்குள்ள தலைமை அர்ச்சகரிடம் அழைத்துச் சென்று தன்
விருப்பத்தைச் சொன்னார். அவரும் அவனை படிக்கவைத்து
அர்ச்சகராக்கிவிடுகிறேன் என்றார்.
ஜோஜி மற்ற மாணவர்களுடன் தங்கி அர்ச்சகர் கொடுக்கும் பாடங்களைப்
படிக்க ஆரம்பித்தான். அர்ச்சகர் எழுதுவதற்குத் தேவையான மை குச்சி,
தூரிகை,சிலேட்டு போன்ற கல் பலகை போன்றவற்றையும் ஜோஜிக்கு
கொடுத்திருந்தார்.
ஜோஜி எழுதுவதற்கு மை தயாரித்தான். ஜோஜி போல மற்ற மாணவர்களும்
மை தயாரித்து பாடங்களை கண்ணும் கருத்துமாக எழுதித் தயாரித்தனர்.
ஆனால் ஜோஜியோஅவனுக்கு எழுதக் கொடுத்திருந்த தாளில் மணிக்கணக்கில் எதுவுமே எழுதவே இல்லை. அதன் பின் அவனுடைய தாட்களில் வரையத் துவங்கினான். அவன் வரைந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
அது பூனை!
பூனை.....பூனை மேலும் பூனைகள்! சிறிய பூனைகள், பெரிய பூனைகள்,
ஒல்லியான பூனைகள்,குண்டான பூனைகள்,பூனைகள்...பூனைகள்.. .பூனைகள்,
பூனைகள்...பூனைகள்!
"நீ பூனைகள் வரைவதை உடனடியாக நிறுத்தவேண்டும். இப்படியே பூனைகள்
மட்டுமே வரைந்துகொண்டிருந்தால் நீ எப்படி அர்ச்சகராவது?" என்று கோவில்
தலைமை அர்ச்சகர் கேட்டார்.
"அய்யா, என்னை மன்னிச்சுருங்க;இனிமேல் பூனை படம் வரைவதை
நிறுத்த முயல்கிறேன்,"என்று பவ்யமாக பதில் சொன்னான் ஜோஜி.
அவனும் முயற்சி செய்தான். ஆனால், கோவில் பூனையை குறுக்கே
மறுக்கே பார்க்கும்போது அவன் படிக்கவேண்டியதையும் எழுத
வேண்டியதையும் மறந்து இன்னொரு பூனையை வரைய ஆரம்பித்துவிடுகிறான்.
இது ஜோஜியை பேராபத்தில் கொண்டுபோய்விட்டுவிட்டது;கோவி ல் சுவர்,
திரைச்சீலை, காகிதத்தாள் என்று எல்லாவற்றிலும் பூனைகளாக வரைந்து
தள்ளினான். கோவிலில் எதைப் பார்க்கிறார்களோ இல்லையோ பக்தர்கள்
சின்னது பெரியதுமான பூனைகள் படங்களையே அதிகம் பார்த்தனர்.
பக்தர்கள் தலைமை அர்ச்சகரிடம் புகார் செய்தனர்.
"ஜோஜி நீ ஒரு போதும் அர்ச்சகராகப் போவது இல்லை," என்று
மிகுந்த வருத்தத்தோடு சொன்னார்.
அதுமட்டுமல்ல உன்னுடய மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு
வீட்டுக்கே போய்விடு என்றும் சொல்லிவிட்டார்.
ஜோஜி தன் அறைக்குச் சென்று அவனுடைய பொருட்களை எல்லாம்
மூட்டை கட்டினான். ஆனால் வீட்டுக்குப் போவதற்குப் பயமாக இருந்தது.
அவனுடைய அப்பா கோபத்தில் என்ன செய்வார் என்பது அவனுக்கே
தெரியாது. அதனால் வீட்டுக்குப் போவதை விட அருகிலுள்ள இன்னொரு
கோவிலுக்குப் போய் அங்கு தங்க முடியுமா என்று பார்ப்போம் என முடிவு செய்துகொண்டான்.
ஜோஜி நடக்கத் துவங்கினான். இருட்டிக்கொண்டு வந்தது. வேகவேகமாக
அந்தக் கிராமத்தை நோக்கி நடந்தான். ஒருவழியாக கோவிலுக்கு வந்து
சேர்ந்தான். கோவில் படிக்கட்டுகளில் ஏறி கோவில் கதவைத் தட்டினான்.
ஒருத்தரும் வந்து கதவைத் திறக்கவில்லை. பெரிய கதவை மிகுந்த சிரமப்
பட்டு கதவைத் தள்ளித் திறந்து உள்ளே போனான். கோவிலுக்குள் எங்கும்
ஒரே இருட்டு. ஜோஜிக்கு ஒன்றும் புரியவில்லை.
"ஏன் கோவிலுக்குள் விளக்கு இல்லை;ஆட்களும் இல்லை. என்னாச்சு இந்தக்
கோவிலுக்கு என்று அவனுக்கு அவனே கேட்டுக்கொண்டான்.
கதவுக்கு அருகே இருந்த விளக்கு ஒன்றை எரியவிட்டான். அப்போதுதான்
பார்த்தான். அதையெல்லாம் பார்த்தபோது அவனுக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டது.
மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரமாகச் சத்தம்போடவேண்டும் என்று
நினைத்தான். "ஐ,ஜாலி..ஜாலி..நமக்கு இப்ப ஜோலி வந்துருச்சு" என்று
வாய்விட்டுப் பாடவும் செய்தான்.
அப்படி என்ன ஜோஜி பார்த்தான்?
அந்தப் பெரிய அறையில் அறையைச் சுற்றித் திரைச்சீலைகள், பெரிய பெரிய
வரைபடத் தாள்கள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. அதுதான் அவன் மகிழ்ச்சிக்குக் காரணம்.
உடனடியாகத் தன்னுடைய பையிலிருந்து மை,தூரிகை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டான். தன்னுடைய வரையும் படலத்தைத் துவங்கி விட்டான்.
வழக்கம்போல ஒன்றை மட்டுமே வரைந்தான்...வெவ்வேறுவடிவங் களில்!
அது பூனை!
பூனை.....பூனை மேலும் பூனைகள்! சிறிய பூனைகள், பெரிய பூனைகள்,
ஒல்லியான பூனைகள்,குண்டான பூனைகள்,பூனைகள்...பூனைகள்.. .பூனைகள்,
பூனைகள்...பூனைகள்!
இந்தத்தடவை அவன் ஒன்றைக் கடைசியாக வரைந்தான். அந்த அறையின்
நீள அகலத்துக்கு இருந்த திரைச் சீலையின் அளவுக்கு பெரிதாக ஒரு இராட்சசப்
பூனையை சிரமப்பட்டு வரைந்தான். அந்தப் பிரம்மாண்டமான பூனை மிகத்
தத்ரூபமாக அழகாகவும் வந்திருந்தது. அவன் இதுவரை அவ்வளவு பெரிய
பூனையை வரைந்ததே இல்லை. அவனுக்கு அந்தப் பூனையை மிகவும்
பிடித்துப் போயிற்று.
அவனுக்கு மிகவும் களைப்பாக இருந்தது.
அந்த அறையிலேயே படுத்தான்;ஆனால் தூக்கம் வரவில்லை. பெரிய
அறையாக இருந்ததால் உலகத்திலேயே அவன் ஒருவன் மட்டும்
இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. எழுந்து எதாவது சின்ன
அறை இருக்குமா என்று அங்குமிங்கும் நடந்து போய் பார்த்தான்.
சுவற்றில் அலமாரி போன்று இருப்பதைக் கவனித்தான்.
அதைத் திறந்துபார்த்தால் வரிசையாக நாலைந்து பேர்கள் படுப்பதற்கு
வசதியான இடமாகத் தெரிந்தது. கதவை இழுத்து மூடுவது போல
வசதி இருந்தது. அது அவனுக்குப் பிடித்திருந்தது. உள்பக்கம்
நுழைந்து படுத்துக்கொண்டு கதவை இழுத்து மூடித் தூங்க
ஆரம்பித்தான்.
திடீர் என பின்னிரவில் ஒரு உறுமல் சத்தம் கேட்டு விழித்தான்.
கொஞ்சம் பயந்தும் போனான். உர்ர்ர்ர்ர்ர்...உர்ர்ர்ர்ர் என்ற சத்தம்
அவன் இருக்கும் அறையில் கேட்டது. சத்தத்தை வைத்துப் பார்க்கும்
போது இது ஒரு பெரிய மிருகமாகத்தான் இருக்கவேண்டும், என்று
நினைத்தான்.
இது போன்ற பிராணிக்குப் பயந்துதான், அர்ச்சகரோ,
பக்தர்களோ இரவில் இங்கு தங்குவது இல்லை போலிருக்கிறது
என்று நினைத்துக்கொண்டான். இப்படி தெரியாத்தனமா வந்து
இங்க மாட்டிக்கிட்டோமே என்று எண்ணினான்.
இப்போது இவன் படுத்திருக்கும் இடத்துக்கு நேர் கீழே
அந்தப் பிராணியின் உறுமல் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில்
அந்தப் பிராணிக்கும் இன்னொரு பிராணிக்கும் நடக்கும்
சண்டைபோல கேட்டது. இரண்டு விலங்குகள் ஒன்றோடு ஒன்று
கட்டிப்புரளுவது போலிருந்தது.
உறுமல் இப்போது ஒருவித வலியினால் வருவது போல கேட்டது. திடீர் என ஒரு பெருத்த ஒலி; அதனைத் தொடர்ந்து பாதத்தை தரையில் தட்டினால் ஒரு
மெல்லிய "தட்..தட்" சத்தம் கேட்குமே, அப்படிக் கேட்டது. அதுவும்
கொஞ்ச நேரத்தில் நின்று போனது. எந்த சத்தமும் இல்லை.
ஜோஜிக்கு உள்ளூர நடுக்கம். அந்த மிருகம் நாம கீழ இறங்கி வரக்
காத்திருக்கோ, என்ற பயம். கதவைத் திறந்து பார்க்கவும் பயம்,அவனுக்கு.
என்னவாக இருக்கும்? அவனால் இந்தப் பிராணியாகத்தானிருக்கும்
என்ற உறுதியான முடிவுக்கு வரமுடியவில்லை.
அப்படி இப்படி என்று தூங்காமல் கொட்டகொட்டவிழி த்திருந்தான் ஜோஜி.
சில மணிநேரங்களில் விடிந்துவிட்டதற்கான அறிகுறி தெரிந்தது. விடியல்
காலை சூரியக் கதிர்கள் கதவைத்தாண்டி உட்புகுவதை உணர்ந்தான்.
எப்படியாவது இறங்கித்தானே ஆகவேண்டும் என்று முடிவு செய்து
கீழே இறஙக முடிவு செய்தான்.
ஜோஜி மெல்ல கதவைத் திறந்துகொண்டு கீழே இறங்கினான்.
இறங்கியதும்,திடுக்கிட வைத்தது அவன் கண்ட காட்சி.
பிரம்மாண்டமான எலி செத்துக்கிடந்தது. அந்த எலி "பசு" மாடு
போல பெரியதாக இருந்தது. இந்த எலி எந்த மிருகத்துடன் சண்டை
போட்டு மடிந்தது? சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கே அப்படி
எந்த மிருகமும அவன் கண்ணில் தென்படவில்லை.
அறையைச் சுற்றி எந்த மிருகமும் தென்படவில்லை. அறையில்
இருந்ததெல்லாம் நீண்டு தொங்கிய திரைச்சீலைகள்; அதில் அவன்
வரைந்த சின்னதும் பெரியதுமான பூனைகள் படங்கள்தான்.
அவன் வரைந்த பெரிய பூனைப் படத்தை மீண்டும் பார்த்தான்; அந்தப்
படம்....!? நான் தலையை வலது பக்கமாகவும் வாலை இடதுபக்கமாகவும்
அல்லவா வரைந்திருந்தேன்.
இப்போது தலை இடதுபக்கமாகவும் வால் வலது பக்கமாகவும்
அல்லவா திரும்பியிருக்கிறது. இது எப்படி நடந்தது?
"பூனை" ஜோஜி ஒரு முறை அழுத்தம் திருத்தமாகச் சொன்னவன்,
என்ன நடந்தது என்பது புரிந்துவிட்டது". அவன் கண்கள் வியப்பால்
விரிந்தது.
நீதான் இந்த எலியிடமிருந்து என்னைக் காப்பாற்றினாயா? கீழே இறங்கி
காரியத்தை முடித்துவிட்டு மீண்டும் மேலே ஏறிக்கொண்டாயா?" என்று
தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
அந்தப் பெரிய பூனையின் பாதங்களை கைகளால் தடவி,"என்னைக்
காப்பாற்றியதற்கு ரெம்ப நன்றி என் மதிப்பிற்குரிய பூனையாரே,"
என்றான் ஜோஜி.
இனிமேல் என் உயிர் உள்ளவரை "பூனை" படம் வரைவதை
யாரும் தடுக்க முடியாது என்றும் தனக்குள் சொல்லிக்கொண்டான்.
அப்போது கோவில் அர்ச்சகர் மற்றும் ஊர் பொதுமக்களில் சிலர்
அங்கு வந்தனர்.
அந்தக் கிராமத்துக்கே சவாலாக இருந்த எலி இறந்து கிடப்பதையும்
அருகில் ஜோஜி நிற்பதையும் பார்த்தனர். நடந்ததை ஜோஜி அவர்களுக்கு
விளக்கினான்.
ஊராருக்கு இந்தச் செய்தி தேனாக இனித்தது. ஜோஜி அந்தக் கிராமத்தாருக்கு
"ஹீரோ"ஆனான். அந்தக் கோவில் அர்ச்சகர் ஜோஜியை அந்தக் கோவிலில்
அவன் விரும்பும் காலம் வரைக்கும் வசிக்கலாம் என்று சொன்னார்.
ஆனால் ஜோஜி ஒரு அர்ச்சகராகவும் ஆகவில்லை; அவன் அப்பா
விரும்பியவாறு ஒரு விவசாயியாகவும் ஆகவில்லை.
அவன் ஒரு ஓவியக் கலைஞனான்! மிகச் சிறந்த ஓவியன்!
அனைத்து நாடுகளும் அவனைக் கெளரவித்தது!
"பூனை"யை மட்டுமே வரையும் ஒரே கலைஞன் அகில உலகிலும்
"ஜோஜி" ஒருவன் மட்டுமே!
Tuesday, February 7, 2012
<<>>தவளை இளவரசன்-11<<>>
<>தவளை இளவரசன்<>
அது ஒரு மாலை நேரம். இளவரசியின் தோழிகள் அன்றைக்கு யாரும்
இல்லை. அரண்மனையின் பின் பக்கம் ஒரு ஒற்றையடிப்பாதை.
கையிலிருந்த "தங்க பந்தை"த் தூக்கிப்போட்டு விளையாடியவாறே
நடந்துகொண்டிருந்தாள இளவரசி. அருகிலிருந்த குளம்
இல்லை. அரண்மனையின் பின் பக்கம் ஒரு ஒற்றையடிப்பாதை.
கையிலிருந்த "தங்க பந்தை"த் தூக்கிப்போட்டு விளையாடியவாறே
நடந்துகொண்டிருந்தாள இளவரசி. அருகிலிருந்த குளம்
தாமரைப்பூக்களால் பார்க்க அழகாக இருந்தது. சறிது நேரம் அந்த அழகைப்
பார்த்து இரசித்துக் கொண்டிருந்தாள்.
பார்த்து இரசித்துக் கொண்டிருந்தாள்.
அந்தக் குளத்தை ஒட்டி ஒரு பாறை இருந்தது. அந்தப் பாறையில் போய்
அமர்ந்தாள்,இளவரசி.
அமர்ந்தாள்,இளவரசி.
இயற்கை அழகை இரசித்துக்கொண்டிருந்த இளவரசி எழுந்தாள். தன்
கையிலிருந்த தங்கப் பந்தை தூக்கிப் போட்டு விளையாட ஆரம்பித்தாள்.
பந்து கீழே விழுந்துவிடாமல் பிடிப்பதும், தலைக்கு மேல்
கையிலிருந்த தங்கப் பந்தை தூக்கிப் போட்டு விளையாட ஆரம்பித்தாள்.
பந்து கீழே விழுந்துவிடாமல் பிடிப்பதும், தலைக்கு மேல்
தூக்கிப் போட்டு பிடிப்பதுமாக விளையாடினாள். ஒரு முறை உயரமாகத்
தூக்கிப் போட்டு பிடிக்க முடியாமல் பந்து பாறையில் விழுந்து உருண்டு ஓடி
குளத்துக்குள் விழுந்தது. தங்கப் பந்து ஆனதால் குளத்துக்குள் உடனே
முழுகத் துவங்கியது. ஆழமான குளம் அது.
தூக்கிப் போட்டு பிடிக்க முடியாமல் பந்து பாறையில் விழுந்து உருண்டு ஓடி
குளத்துக்குள் விழுந்தது. தங்கப் பந்து ஆனதால் குளத்துக்குள் உடனே
முழுகத் துவங்கியது. ஆழமான குளம் அது.
இளவரசிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அழத் துவங்கினாள்.
யாராவது என் தங்கப் பந்தை எடுத்துக் கொடுத்தால் எனக்குச்
சொந்தமானதையெல்லாம் கொடுத்துவிடுவேன்; என் நல்ல ஆடைகள்,
யாராவது என் தங்கப் பந்தை எடுத்துக் கொடுத்தால் எனக்குச்
சொந்தமானதையெல்லாம் கொடுத்துவிடுவேன்; என் நல்ல ஆடைகள்,
எனது நகைகள் எல்லாவற்றையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.
யாராவது உதவி செய்யுங்களேன்," என்று அழுதுகொண்டே சொன்னாள்.
யாராவது உதவி செய்யுங்களேன்," என்று அழுதுகொண்டே சொன்னாள்.
அரண்மனையின் அந்தப்புறத்துக்குள் யாரும் வரமுடியாது. அரண்மனைக்குப்
போய் வேலை ஆட்களிடம் சொல்லி, தண்ணீருக்குள் முழுகித் தேடச்
சொல்ல வேண்டும்,என நினைத்தாள். அதற்குள் இருட்டிவிடுமே
போய் வேலை ஆட்களிடம் சொல்லி, தண்ணீருக்குள் முழுகித் தேடச்
சொல்ல வேண்டும்,என நினைத்தாள். அதற்குள் இருட்டிவிடுமே
என்று நினைத்தபோது இளவரசிக்கு மேலும் அழுகையாக வந்தது.
"இளவரசியே, ஏன் அழுகிறீர்கள்? என்று ஒரு குரல் கேட்டது. சுற்றும்
முற்றும் பார்த்தாள், எவரையும் காணோம். மீண்டும் அந்தக் குரல் கேட்டது.
குரல் குளத்திலிருந்து வந்தது. அதுவும் தாமரை இலையில்
முற்றும் பார்த்தாள், எவரையும் காணோம். மீண்டும் அந்தக் குரல் கேட்டது.
குரல் குளத்திலிருந்து வந்தது. அதுவும் தாமரை இலையில்
அமர்ந்திருந்த தவளை தான் பேசியது. பார்க்கவே அருவெறுப்பாக இருந்தது,
அந்தத் தவளை.
அந்தத் தவளை.
தவளை பேசுவது இளவரசிக்கு வியப்பாக இருந்தது.
"சொறித் தவளையான உன்னால் எனக்கு எப்படி உதவ முடியும்?"என்றாள்
இளவரசி.
இளவரசி.
"முதலில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்; என்னால்
முடிந்தால் செய்கிறேன்,"என்றது தவளை.
முடிந்தால் செய்கிறேன்,"என்றது தவளை.
"என் தங்கப் பந்து இந்தக் குளத்துக்குள் விழுந்துவிட்டது. அதை உன்னால்
எடுத்துத் தரமுடியுமா?
எடுத்துத் தரமுடியுமா?
"இவ்வளவுதானா? என்னால் முடியுமே,"என்றது தவளை.
இந்த சொறித்தவளையால் அந்தப் பந்தை எடுத்து வரமுடியாது என்று
நினைத்தாள் இளவரசி.
நினைத்தாள் இளவரசி.
அதனால் முன்பு சொன்னதையே சொன்னாள்.
"என் தங்கப் பந்தை எடுத்துக் கொடுத்துவிடு. எனக்குச் சொந்தமான
அனைத்தையும் உனக்குத் தருகிறேன்,"என்றாள் இளவரசி.
அனைத்தையும் உனக்குத் தருகிறேன்,"என்றாள் இளவரசி.
"எனக்கு அதெல்லாம் வேண்டாம்; நான் கேட்பதைச் செய்வதாகச் சொன்னால்
எடுத்துத் தருவேன்,"என்றது தவளை.
எடுத்துத் தருவேன்,"என்றது தவளை.
"சரி, என்ன வேண்டுமானாலும் கேள். நீ எனக்கு உதவினால் நான் உனக்கு
உதவுவேன்,"என்றாள் இளவரசி.
உதவுவேன்,"என்றாள் இளவரசி.
"நான் கேட்பது இதுதான். நீ என்னை நேசிக்க வேண்டும். நான் உன்னுடன்
இருக்கச் சம்மதிக்க வேண்டும்.
இருக்கச் சம்மதிக்க வேண்டும்.
நீ சாப்பிடும் தங்கத் தட்டில் நானும் சாப்பிட அனுமதிக்க வேண்டும்.
உன்னுடைய படுக்கையில் நான் படுத்துத் தூங்க அனுமதிக்க வேண்டும்.
இதையெல்லாம் நீ செய்ய ஒத்துக்கொண்டால் நான் உன் பந்தை எடுத்துத்
தருவேன் என்றது தவளை.
உன்னுடைய படுக்கையில் நான் படுத்துத் தூங்க அனுமதிக்க வேண்டும்.
இதையெல்லாம் நீ செய்ய ஒத்துக்கொண்டால் நான் உன் பந்தை எடுத்துத்
தருவேன் என்றது தவளை.
"என்ன திமிர் இந்தச் சொறித் தவளைக்கு! குளத்தை விட்டு வெளியே வரமுடியாத தவளையின் பேராசையைப் பார்! முதலில் பந்தை எடுத்துத் தருகிறதா பார்ப்போம். இந்தத் தவளை கேட்கும் வாக்குறுதியை தருவதாகச்
சொன்னால் போச்சு,"என்று மனதில் இளவரசி நினைத்தாள்.
சொன்னால் போச்சு,"என்று மனதில் இளவரசி நினைத்தாள்.
"நீ, மட்டும் என் பந்தை எடுத்துக் கொடுத்துவிடு;நீ கேட்டதையெல்லாம் நான் செய்வேன்,"என்றாள் இளவரசி.
"வாக்குத் தவறக்கூடாது இளவரசியாரே,சொன்னபடி நடக்க வேண்டும், சரியா?"என்றது தவளை.
"வாக்குத் தவறமாட்டேன். சொன்னபடி நடந்துகொள்வேன், நீ என் பந்தை முதலில் எடுத்து வா,"என்றாள் இளவரசி.
தவளை தண்ணீருக்குள் "தொப்" என்ற சத்தம் கிளம்ப உள்ளே போனது. குளத்தின் அடி ஆழம் சென்று தேடி தஙகப் பந்தைக் கண்டுபிடித்தது. அதை மேலே எடுத்து வந்து குளக்கரையில் போட்டது,தவளை.
அவ்வளவுதான், ஓடிப்போய் இளவரசி பந்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.
தவளையைப் பற்றிய கவலை இல்லாமல் அரண்மனையை நோக்கிப் போனாள்.
அவள் ஒரு நன்றி கூட சொல்லாமல் போவதைப் பார்த்த தவளைக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது.
"இளவரசியாரே, நில்லுங்கள். நீங்கள் சொன்னபடி நடந்துகொள்ள வேண்டும்.
என்னை உங்களோடு எடுத்துச் செல்லுங்கள். நில்லுங்கள், இளவரசி..."என்று தவளை கத்தியது.
என்னை உங்களோடு எடுத்துச் செல்லுங்கள். நில்லுங்கள், இளவரசி..."என்று தவளை கத்தியது.
ஆனால், இளவரசி எதுவும் காதில் விழாதது போல வேகமாக நடந்து போய்விட்டாள்.
அன்று இரவு.....
இளவரசி, அரசர்,அரசியாரோடு உணவு உண்ணும் நேரம். இளவரசி ஒரு வினோதமான சத்தத்தைக் கேட்டாள். "தப்..தப்..சப்...சப்..." அந்த சத்தம் பளிங்கு கல் மாடிப்படிக்கட்டில் இருந்து வந்து சாப்பாட்டுக்
கூடக் கதவு வரை வந்து நின்றுவிட்டது. மெல்லக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
"என் அருமை இளவரசியே, கதவைத் திறவாய்,
உன் அருமை தவளை இங்கே! கதவைத் திறந்து பார்,
உன்னை நேசிக்கும் ஓர் உயிர் உனக்காக காத்திருக்கிறது!
சொன்ன வாக்கு தவறுதல் அழகா? குளக்கரையில் நீ
சொன்ன வாக்கு தவறாமல் காப்பாற்ற வேண்டாமா?" - என்று
இனிமையாகப் பாடியது அந்தக் குரல்.
இளவரசி வேகமாகப் போய் கதவைத் திறந்து பார்த்தாள். அங்கே தவளை காட்சியளித்தது.
தவளையை இளவரசி அங்கே எதிர்பார்க்கவில்லை.
"வாக்கு கொடுத்தபடி நடவாமல் ஏமாற்றிவிட்டு வந்தது சரியா? தவளை கேட்டது.
தவளைக்கு பதில் சொல்லாமல், வேகமாக கதவைச் சாத்திவிட்டு சாப்பாட்டு மேசைக்கு திரும்பினாள் இளவரசி.
இளவரசியின் கலவரமான முகத்தை அரசர் கவனித்தார். எதைக் கண்டோ மகள் பயந்து வந்தது போல் இருந்தது அவருக்கு.
"என்னம்மா? என்ன விசயம்? எதையோ கண்டு பயந்துவிட்டாயா?"என்றார் அரசர்.
"ஒரு சொறித்தவளையப்பா அது! இன்று குளத்துக்குள் விழுந்த என் பந்தை அது எடுத்துக் கொடுத்தது.
அதற்கு ஒரு வாக்கு கொடுத்தேன்; அதனால் அது இங்கே வந்து நியாயம் கேட்கிறது,"என்று விபரம் சொன்னாள்.
"என்ன பெண்ணம்மா,நீ! யாருக்கும் நாம் வாக்கு கொடுத்தால் அதன்படி நடக்கவேண்டும். பிறருக்கு நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும். அது தவளையாகவே இருந்தாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமம்மா,"என்று புத்திமதி சொன்னார்.
அப்போது மீண்டும் கதவைத் தட்டும் ஓசையும் தொடர்ந்து தவளை பாடும் பாட்டும் கேட்டது.
"என் அருமை இளவரசியே, கதவைத் திறவாய்,
உன் அருமை தவளை இங்கே! கதவைத் திறந்து பார்,
உன்னை நேசிக்கும் ஓர் உயிர் உனக்காக காத்திருக்கிறது!
சொன்ன வாக்கு தவறுதல் அழகா? குளக்கரையில் நீ
சொன்ன வாக்கு தவறாமல் காப்பாற்ற வேண்டாமா? -
"அந்தத் தவளையைப் புலம்ப வைத்து விட்டாயே. அது சரியல்ல;அது
நீ கேட்ட உதவியைச் செய்து கொடுத்தது. அதற்கு பதிலாக தவளை கேட்டதை நீயும் ஒப்புக்கொண்டிருக்கிறாய். அதனால் வாக்கு கொடுத்தபடி கதவைத் திறந்து உள்ளே அழைத்துவா,"என்று அரசர் தன் மகளுக்குச் சொன்னார்.
வேறு வழியில்லாமல் இளவரசி கதவைத் திறந்து தவளையை அழைத்து
வந்தாள். இளவரசி அமர்ந்து சாப்பிடும் நாற்காலியில் தவளை தாவி ஏறியது.
"நீ சாப்பிடும் தட்டு அருகே என்னை உட்கார வை;நானும் சாப்பிட வேண்டும்,"என்றது தவளை.
இளவரசியும் மனமின்றி தவளையை எடுத்து தான் சாப்பிடும் தங்கத்
தட்டு அருகே வைத்தாள். இப்போது இளவரசி சாப்பிடும் தட்டிலேயே
தவளையும் சாப்பிட ஆரம்பித்தது.
தவளை சாப்பிட்டு முடித்ததும்,"நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன்.
என்னை எடுத்துக்கொண்டு போய் உன் படுக்கையில் படுக்க வை,"என்றது.
வேறு வழி இல்லாமல் இளவரசி தவளையை எடுத்துக்கொண்டு போனாள்.
தன் படுக்கையில் படுக்க வைத்தாள். தவளையும் சுகமாக இரவு முழுக்க
தூங்கியது.
காலையில் சூரிய வெளிச்சம் வந்தவுடன் தவளை விழித்துக்கொண்டது.
உடனே கட்டிலில் இருந்து கீழே குதித்தது. மாடிப்படிக்கட்டில் இறங்கி
அரண்மனையை விட்டு வெளியேறியது.
தவளை போன பிறகு இளவரசி விழித்தெழுந்தாள். தவளை அருகில்
இல்லையென்றதும் மிக மகிழ்ந்தாள்,இளவரசி.இனி தவளை பற்றிய
கவலை இல்லை என்று நினைத்ததில் வியப்பு எதுவும் இல்லைதான்.
இரவு வந்தது; தவளையும் திரும்ப வந்தது. நேற்றுப் போலவே
சத்தம் எழுப்பிக் கதவைத் தட்டியது தவளை; அடாடா, தவளை
வந்துவிட்டதே என்று கவலைகொண்டாள்,இளவரசி. இளவரசி
என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது தவளை
பாடத் துவங்கியது.
"என் அருமை இளவரசியே, கதவைத் திறவாய்,
உன் அருமை தவளை இங்கே! கதவைத் திறந்து பார்,
உன்னை நேசிக்கும் ஓர் உயிர் உனக்காக காத்திருக்கிறது!
சொன்ன வாக்கு தவறுதல் அழகா? குளக்கரையில் நீ
சொன்ன வாக்கு தவறாமல் காப்பாற்ற வேண்டாமா?" -
தவளையின் பாடலைக் கேட்ட அரசர்,"உன் தவளை நண்பன்
வந்துவிட்டான்;போய் அழைத்துவா,"என்று செல்லமாகவும்
கண்டிப்போடும் சொன்னார்.
வேறு வழியின்றி கதவைத் திறந்து இளவரசி, தவளையை அழைத்து வந்தாள்.
முதல் நாள் போல இளவரசியின் தட்டில் சாப்பிட்டது;இளவரசியின் படுக்கையில்
போய் படுத்துத் தூங்கியது. சூரிய வெளிச்சம் வந்தவுடன் கிளம்பிப் போய் விட்டது.
மூன்றாவது நாளும் தவளை வந்து கதவைத் தட்டி பாட்டுப்பாடியது;இள
வரசியுடன் கட்டிலில் படுத்து தூங்கியது. வழக்கம்போல இளவரசியும்
அருகில் படுத்து தூங்கிவிட்டாள்.
காலையில் கண்விழித்த இளவரசி திடுக்கிட்டாள். தவளை இல்லை;ஆனால்
தவளைக்குப் பதிலாக ஒரு அழகிய வாலிபன் படுத்திருந்தான். இளவரசியின்
அதிர்ச்சிக்குக் காரணம் அந்த இளைஞன். அந்த வாலிபன் மிகுந்த அழகுள்ள
வனாக இருந்தான். அவன் கண்களும் முகமும் எவரையும் கவரக் கூடியதாக
இருந்தான்.
இளவரசி பார்த்துக்கொண்டிருந்தபோதே, வாலிபனும் விழித்தெழுந்தான்.
இளவரசியாரே,"எனக்கு உதவியதற்கு மிக்க நன்றி,"என்றான்.
"நீங்கள் யார்? நான் உங்களுக்கு என்ன உதவி செய்தேன்?,"என்றாள்.
"இளவரசியாரே, நான்தான் தவளையாக இருந்தேன்; ஒரு சூனியக்காரி
என்னை தவளையாக்கிவிட்டாள். இளவரசி, ஒருத்தி அவள் தட்டில் உன்னைச் சாப்பிடச் செய்ய வேண்டும். மூன்று இரவுகள் அவளுடைய படுக்கையில் தூங்க வைக்க வேண்டும்; அப்போதுதான் உன் சாபம் நீங்கி இளவரசனாவாய்,"என்றாள்.
தங்கப் பந்தை நீ தொலத்துவிட்டு என் உதவியைக் கேட்டாய்; நான் உன்
உதவியைக் கேட்டேன். உன்னால், நான் சூனியக்காரியின் சாபத்திலிருந்து
மீண்டேன். அதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
நான் வல்லக்கோட்டை அரசனின் ஒரே மகன்! நீ, விரும்பினால் என் தந்தை
யிடம் அழைத்துச் செல்கிறேன். என் தந்தையின் அனுமதியுடன் நாம் திருமணம் செய்துகொள்வோம். என்ன சொல்கிறாய்?" என்று கேட்டான் இளவரசன்.
"நான் திருமணம் செய்யப்போவது தவளையை அல்ல; இளவரசனைத்தானே!
அதனால் சம்மதிக்கிறேன்,"என்றாள் இளவரசி.
இளவரசி, தன் தந்தையிடம் அழைத்துச் சென்று வல்லக்கோட்டை இளவரசனை அறிமுகப்படுத்தினாள். அவருக்கும் இளவரசனைப் பிடித்திருந்தது.
எட்டுக் குதிரைகள் பூட்டிய இரதம் தயாராக நின்றது;அதன் சேணங்கள்
அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு குதிரையின்
தலையிலும் ஒரு வெண்சிறகுகள் ஒயிலாக ஆடியது. அந்த இரதத்தில்
இளவரசியும், இளவரசனும் வல்லக்கோட்டைக்குப் பயணமானார்கள்.
வல்லக்கோட்டை அரசரும் அரசியும் அரண்மனை வாயிலில் நின்று
வரவேற்று அழைத்துச் சென்றனர். அதன் பின் இருவருக்கும் திருமணம்
வெகு விமரிசையாக நடந்தது. அந்த நாட்டு மக்கள் உற்சாகமாக அந்தத்
திருமணத்தைக் கொண்டாடினர்.
தவளை இளவரசனும் இளவரசியும் வெகு காலம் சந்தோசமாக வாழ்ந்தனர்; இளவரசனின் தந்தையான அரசர் மறைவுக்குப் பின் தவளை இளவரசன் அந்த நாட்டுக்கு அரசர் ஆனார். வல்லக்கோட்டை நாட்டு மக்கள்
ஒரு குறையும் இல்லாமல் அவருடைய ஆட்சியில் வாழ்ந்தனர்
தவளை இளவரசனும் இளவரசியும் வெகு காலம் சந்தோசமாக வாழ்ந்தனர்; இளவரசனின் தந்தையான அரசர் மறைவுக்குப் பின் தவளை இளவரசன் அந்த நாட்டுக்கு அரசர் ஆனார். வல்லக்கோட்டை நாட்டு மக்கள்
ஒரு குறையும் இல்லாமல் அவருடைய ஆட்சியில் வாழ்ந்தனர்
<0>
Saturday, February 4, 2012
<<>>பேசும் ஓவியம்!<<>>
<<>>பேசும் ஓவியம்!<<>>
அன்பு ஒரு முகம் வரைய படாத பாடுபட்டுக்கொண்டிருந்தான். முகத்துக்கான வட்டமே சரியாக வரவில்லை. அப்புறம் எப்படி கண்,காது,மூக்கு,வாய் போடுவது?
ஒரு வெள்ளைப் பேப்பரில் முகம் ஒன்று வரைஞ்சுட்டு வாங்கன்னு ஆசிரியர்
சொல்லி ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆச்சு. மற்ற மாணவர்களும் அன்பைப்
போல முயற்சி பண்ணிக்கிட்டுத்தான் இருக்காங்க. மத்த மாணவர்கள் கண்,காது,மூக்குன்னு வரைஞ்சுட்டாங்க.
ஆனா, அன்புக்குத்தான் முகத்தை வரைய வட்டமே ஒழுங்கா வரமாட்டேங்குது. நாலைந்து வெள்ளைத்தாள்கள் இரப்பரில் அழிச்சு அழிச்சே வெள்ளை நிறம் போய் கருப்பு நிறமாகி கசக்கி எறிஞ்சாச்சு; ஐந்தாவது வெள்ளைத்தாளில் இப்போது முயற்சி பண்ணுகிறான்.
பென்சிலை இலாவகமாப் பிடிச்சு இந்தத் தடவை முகத்துக்கான வட்டத்தைப்
போட்டுடனும் என்று சொல்லிக்கொண்டான். ஆச்சு....அரை வட்டம் ஓரளவு
வந்துருச்சு. கீழ்பக்கமா இழுக்கும் போது.....கோணிக்கொண்டு போய்விட்டது.
அவனுக்கு அலுப்பா இருந்துச்சு; மீண்டும் அழிச்சு,வரைஞ்சு இப்படியும்
அப்படியும் திருப்பிப் பார்த்தான்,அன்பு. முகத்துக்கான வட்டமா இல்லையே.
என்ன பண்ணலாம்? கொஞ்ச நேரம் பக்கத்திலிருந்தவன் எப்படி வரைஞ்சுகிட்டு
இருக்கான்னு பார்த்தான்.
"இன்னும் கொஞ்ச நேரத்துல மதியச் சாப்பாட்டுக்கு மணி அடிச்சுருவாங்க,
இன்னும் நீங்க படம் போட்டுக்கொண்டாரலை.."என்று ஆசிரியர் சொல்ல
ஆரம்பிக்க சிலர் நாங்க முடிச்சுட்டோம், சார் என்று குரல்கள் ஒலித்தது.
அன்பு, மறுபடியும் வரைவதற்கு தயார் ஆனான். கீழ் பக்கம் கோடு இழுத்தபோது மறுபடி கோணலாய்ப் போனது. அந்த இடத்தை மட்டும் அழித்துவிட்டு கோடு போட்டுப் பார்த்தான்.
"சரி, இனிமே வரைய முடியாது. இன்னும் கொஞ்ச நேரத்துல மணியடிக்கப்
போகுது. மதியம் சாப்பிட்டு வந்துட்டுத்தான் போட்டுப்பாக்கனும்,"என்று
முடிவு செய்து கொண்டான்,அன்பு.
வரைந்த தாளை ஒரு நோட்டில் வைத்து மூடியபோதுதான் அந்தக் குரல்
நோட்டிலிருந்து வந்தது.
"ஏம்ப்பா, அன்பு உன்னைத்தான்....என்னை இப்படியே அரையும் குறையுமா
விட்டுட்டு போறியே. போறதுதான் போற..எனக்கு பாக்குற மாதிரி
ரெண்டு கண்ணையாவது போட்டுட்டுப் போ," என்று அந்தக் கண்
இல்லாத ஓவியம் கேட்டது.
"ஓவியம் பேசுமா?" அன்புக்கு ஆச்சரியமாக இருந்தது.
"ஆமா, நான் தான் பேசுறேன். எனக்கு கண்ணையாவது குடுத்தா
நான் பாக்கவாவது முடியும்,"என்றது அந்தப் படம்.
உடனே அன்பு பென்சிலை எடுத்து கண்கள் இருக்க வேண்டிய
இடத்தில் ரெண்டு புள்ளியை அழுத்தி வைத்தான்.
"ம்ம்ம்ம்...இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணி நல்லாத்தான் போடேன்,"
என்று சொன்னது படம்.
புள்ளியை சிறிது பெரிது படுத்தினான்;மேலே புருவம் போல
கோடிழுத்தான்.
"நான் வாயில்லாமலே உங்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன். வாயையும்
போடேன்,"படம் விடாமல் மேலும் சொன்னது.
அன்புவுக்கே உற்சாகம் வந்துவிட்டது.
"வாய்...இப்படித்தானே...!?" அன்பு இப்போது சகஜமாக ஓவியத்திடம்
பேச ஆரம்பித்துவிட்டான். ஓவியமும் இப்படிபோடு, அப்படி கோடு
இழு. அதைக் கொஞ்சம் வளைத்துப் போடு. ஒரு சுழி சுழித்துவிடு
என்று சொல்லச் சொல்ல இவனும் முகத்தை பூர்த்தி பண்ணிவிட்டான்.
முகத்தை பூர்த்தி செய்யவும் மணி அடிக்கவும் சரியாக இருந்தது.
"என்ன, எப்படி வரைஞ்சு இருக்கேன். உனக்கு பிடிச்சிருக்கா?"அன்பு கேட்டான்.
"நல்லா வரைஞ்சுட்டேன்னு சொல்லமுடியாது. பரவாயில்லை. முதலில்
முகத்துக்காக என் மூஞ்சியை அசிங்கமா வரைஞ்சதுக்கு இப்ப எவ்வளவோ
ப்ரவாயில்லை.
நான் இங்கேயே இருப்பேன். நீ வீட்டுக்கு போய் சாப்பிட்டுவிட்டு
இங்க வா. இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணி என் முகத்தை நீ அழகா
போட்டிடலாம், சரியா?" என்றது ஓவியம்.
"ரெம்ப நன்றி. அப்படிப் போடு;இப்படி கோடு இழுன்னு சொன்னீங்க;நீங்க சொல்லலைன்னா அந்த வட்டத்திலேயேதான் இருந்திருப்பேன். சீக்கிரம் வந்துவிடுவேன்,"என்று சொல்லிக் கிளம்பினான்.
வீட்டில் அம்மா என்ன சாப்பாடு போட்டாலும், பிடிக்கலை போ
என்று சொல்லி அடம் பிடிப்பான். இன்று அம்மா தட்டில் போட்டதைச்
சாப்பிட்டான்;தட்டைக் காலிசெய்தான். கையைக் கழுவியதுதான்
தெரியும் பள்ளிக்கூடத்தில் வந்துதான் நின்றான்.
நோட்டைத் திறந்து ஓவியத்தை எடுத்தான்.
"யாரும் வரலை; அதுக்குள்ள சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டாயா?"என்றது
ஓவியம்.
"ஆமா! நீ இருப்பியோ,போயிருவியோன்னு வேகமா வந்துட்டேன்.
சரி இப்பச் சொல்லு. எதையெல்லாம் அழிச்சுட்டுப் போட்டா
முகம் பாக்க நல்லா இருக்கும். நீ சொல்ற. நான் போடுறேன், சரியா," என்றான்
அன்பு.
"அங்க ஒரு பையன் நிக்கிறான் பாரு. அவன் கண்ணைப் பாரு. நீ புருவத்துக்கு
ஒரு கோடு போட்டிருக்கே. அது கொஞ்சம் வளைவா அந்த முடியெல்லாம் இருந்தா இன்னும் நல்லா இருக்கும். அந்தப் பையன் மூக்கு எப்படி இருக்கு பாரு. லேசா அந்த இடத்துல ஒரு வளைவு வந்தா அம்சமா இருக்கும் இல்லையா?
"ஆகா..பாக்கவே இப்ப முகம் நல்லா இருக்கே,"என்றான் அன்பு.
"இன்னும் காது, தலை முடி இதெல்லாம் சரி செய்ய வேண்டும். அந்த
தலைமுடி அப்படி வரக்கூடாது. நீ வகிடு எடுத்து தலை சீவி வருவாயே..
ம்ம்..அப்படித்தான்," ஓவியம் அன்புவுக்கு தனியாக வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தது.
"இப்ப எல்லாமே நல்லா வந்துருக்கு. இன்னைக்கு வாத்தியார் என்னோட
முகம் நல்லா வந்திருக்குன்னு சொல்லப்போறார்,பாரேன்,"என்றான் அன்பு.
"வாய்...பாரு...உதடு...அத ஒரு சின்ன கோடு போட்டு பிரி பாக்கலாம். இன்னும்
கொஞ்சம் வாய் நல்லா வந்துரும்," என்றது ஓவியம்.
"ஆமா..இல்ல...இப்பப் பாரு...சரியா வந்துருச்சு. உதடு அழகா
வந்துருக்கு. இல்லையா?" என்றான் அன்பு.
"எனக்கு இன்னும் திருப்தியாகலை. ஆனாலும் பரவாயில்லை.
இந்த முகம் அழகா..ஓரளவு இருக்கு. அழகா இல்லைன்னு சொல்லமுடியாது,"
என்று முகம் சொல்லியது.
"இந்த அளவுக்கு முகம் நல்லா வந்ததுக்கு நீங்கதான் காரணம். நீங்க
சொல்லச் சொல்லத்தான் நான் திருத்தி வரைந்து இந்த அளவுக்கு
வந்துருக்கு. ரெம்ப நன்றி, சார்"என்றான் அன்பு.
"நான் என்ன செய்தேன். எல்லாம் நீ தானே வரைந்தாய். உன் முயற்சிதான்
அவ்வளவும்;உனக்கு ஆர்வம் அதிகமானதால் சிரத்தையோடு வரைந்தாய்.
இதில் என் பங்கு ஒன்றுமே இல்லை. உன் முயற்சிக்கும் பயிற்சிக்கும்
கிடைத்ததுதான் இந்த முகம்,"என்றது ஓவிய முகம்.
"என்ன இருந்தாலும் ஓவிய ஆசிரியராக இருந்து எனக்குச் சொல்லிக்கொடுத்ததற்கு நன்றி," என்றான்.
மணியடித்தது.
எங்கே வரைந்ததெல்லாம் கொண்டாங்க; ஆசிரியர் சத்தமாகச் சொல்ல
எல்லாம் வரிசையில் போய் கொடுத்தனர்.
"இன்றைக்கு அருமையா வரைஞ்சது யார் தெரியுமா?"ஆசிரியர்
மாணவர்களை நோக்கிக் கேட்டார்.
பின் அவரே சொன்னார். இன்றைக்கு அழகான முகத்தை
வரைந்தது நம் அன்புதான்!"என்றார். அன்பு வரைந்த படத்தை
அனைவருக்கும் காட்டினார். அன்புவுக்கு பெருமையாக இருந்தது.
இரவு, அந்த முகம் படத்தை அவனுடைய மேசையின் மீது வைத்து
நோட்டை அதன் மேல் வைத்துவிட்டு அப்பாவிடம் காலையில்
காட்டவேண்டும் என்று நினைத்துக்கொண்டே போய் படுத்துவிட்டான்.
காலையில் எழுந்ததும், முதல் வேலையாக மேசை மீது போய்
பார்த்தான். அங்கே எதுவும் இல்லை. யார் எடுத்திருப்பார்கள்?
பையைத் திறந்து பார்த்தான். அந்த நோட்டில் முகம்
பாதி மட்டும் வரைந்த தாள் மட்டுமே இருந்தது. முழுவதுமாக
வரைந்த "முகம்" ஓவியம் எங்கே?
ஓவியம் பேசியதெல்லாம் கனவில்தானா? யோசித்துப்பார்த்தான்.
ஓவியம் என்ன சொன்னது?
நான் ஒன்றுமே செய்யவில்லை;செய்ததெல்லாம் நீதான். உன் விடா
முயற்சியும், பயிற்சியும்தான் என்று தானே சொல்லியது. ஆம்! அதுதான்
சரி.
முன்பெல்லாம் எதையாவது வரைய எண்ணி வரைவேன்; சரியா வரலைன்னா
அப்படியே விட்டுவிடுவேன். ஆனால் சரியாக வரும் வரை முயற்சி செய்து
திரும்பத் திரும்ப பயிற்சி செய்யவில்லை. அதனால்தான் படங்கள் வரையும்
முயற்சியில் வெற்றிபெறவில்லை. இப்படியெல்லாம் சிந்தித்தவன் ஒரு
முடிவுக்கு வந்தான்.
அந்த வெள்ளைத்தாளை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தான். முக வட்டத்தை
வரைந்தான். சரியாக வரவில்லை. மீண்டும் முயற்சி செய்தான். சின்னச் சின்ன
மாற்றங்கள் செய்து சரிபார்த்தான். சரியில்லையென்று அழித்தான். போட்டான்.
திருத்தினான். ஒவ்வொன்றுக்கும் தனிக் கவனம் செலுத்தினான். முகம்
வந்துவிட்டதே! மகிழ்ச்சியால் துள்ளினான்.
அதன் பிறகு எப்போது ஓவியம் வரைய வேண்டும் என்றாலும் அன்புவிடம்
ஒரு மாற்றம் காணப்பட்டது. ஏனோதானோவென்று எதையும் வரைவதில்லை.
அது சரியாக இருக்கிறது என்கிற வரை பயிற்சி செய்வான்;விடாமுயற்சியோடு
அழகுபடுத்துவான். திருப்தி பெறும்வரை கவனம் பிசகாமல் அக்கறையோடு,
ஆர்வத்தோடு ஒன்றிவிடுவான். ஒருநாள் நிச்சயம் அன்பு மிகப்பெரிய ஓவியனாக
வருவான்!
அன்பு ஒரு முகம் வரைய படாத பாடுபட்டுக்கொண்டிருந்தான். முகத்துக்கான வட்டமே சரியாக வரவில்லை. அப்புறம் எப்படி கண்,காது,மூக்கு,வாய் போடுவது?
ஒரு வெள்ளைப் பேப்பரில் முகம் ஒன்று வரைஞ்சுட்டு வாங்கன்னு ஆசிரியர்
சொல்லி ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆச்சு. மற்ற மாணவர்களும் அன்பைப்
போல முயற்சி பண்ணிக்கிட்டுத்தான் இருக்காங்க. மத்த மாணவர்கள் கண்,காது,மூக்குன்னு வரைஞ்சுட்டாங்க.
ஆனா, அன்புக்குத்தான் முகத்தை வரைய வட்டமே ஒழுங்கா வரமாட்டேங்குது. நாலைந்து வெள்ளைத்தாள்கள் இரப்பரில் அழிச்சு அழிச்சே வெள்ளை நிறம் போய் கருப்பு நிறமாகி கசக்கி எறிஞ்சாச்சு; ஐந்தாவது வெள்ளைத்தாளில் இப்போது முயற்சி பண்ணுகிறான்.
பென்சிலை இலாவகமாப் பிடிச்சு இந்தத் தடவை முகத்துக்கான வட்டத்தைப்
போட்டுடனும் என்று சொல்லிக்கொண்டான். ஆச்சு....அரை வட்டம் ஓரளவு
வந்துருச்சு. கீழ்பக்கமா இழுக்கும் போது.....கோணிக்கொண்டு போய்விட்டது.
அவனுக்கு அலுப்பா இருந்துச்சு; மீண்டும் அழிச்சு,வரைஞ்சு இப்படியும்
அப்படியும் திருப்பிப் பார்த்தான்,அன்பு. முகத்துக்கான வட்டமா இல்லையே.
என்ன பண்ணலாம்? கொஞ்ச நேரம் பக்கத்திலிருந்தவன் எப்படி வரைஞ்சுகிட்டு
இருக்கான்னு பார்த்தான்.
"இன்னும் கொஞ்ச நேரத்துல மதியச் சாப்பாட்டுக்கு மணி அடிச்சுருவாங்க,
இன்னும் நீங்க படம் போட்டுக்கொண்டாரலை.."என்று ஆசிரியர் சொல்ல
ஆரம்பிக்க சிலர் நாங்க முடிச்சுட்டோம், சார் என்று குரல்கள் ஒலித்தது.
அன்பு, மறுபடியும் வரைவதற்கு தயார் ஆனான். கீழ் பக்கம் கோடு இழுத்தபோது மறுபடி கோணலாய்ப் போனது. அந்த இடத்தை மட்டும் அழித்துவிட்டு கோடு போட்டுப் பார்த்தான்.
"சரி, இனிமே வரைய முடியாது. இன்னும் கொஞ்ச நேரத்துல மணியடிக்கப்
போகுது. மதியம் சாப்பிட்டு வந்துட்டுத்தான் போட்டுப்பாக்கனும்,"என்று
முடிவு செய்து கொண்டான்,அன்பு.
வரைந்த தாளை ஒரு நோட்டில் வைத்து மூடியபோதுதான் அந்தக் குரல்
நோட்டிலிருந்து வந்தது.
"ஏம்ப்பா, அன்பு உன்னைத்தான்....என்னை இப்படியே அரையும் குறையுமா
விட்டுட்டு போறியே. போறதுதான் போற..எனக்கு பாக்குற மாதிரி
ரெண்டு கண்ணையாவது போட்டுட்டுப் போ," என்று அந்தக் கண்
இல்லாத ஓவியம் கேட்டது.
"ஓவியம் பேசுமா?" அன்புக்கு ஆச்சரியமாக இருந்தது.
"ஆமா, நான் தான் பேசுறேன். எனக்கு கண்ணையாவது குடுத்தா
நான் பாக்கவாவது முடியும்,"என்றது அந்தப் படம்.
உடனே அன்பு பென்சிலை எடுத்து கண்கள் இருக்க வேண்டிய
இடத்தில் ரெண்டு புள்ளியை அழுத்தி வைத்தான்.
"ம்ம்ம்ம்...இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணி நல்லாத்தான் போடேன்,"
என்று சொன்னது படம்.
புள்ளியை சிறிது பெரிது படுத்தினான்;மேலே புருவம் போல
கோடிழுத்தான்.
"நான் வாயில்லாமலே உங்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன். வாயையும்
போடேன்,"படம் விடாமல் மேலும் சொன்னது.
அன்புவுக்கே உற்சாகம் வந்துவிட்டது.
"வாய்...இப்படித்தானே...!?" அன்பு இப்போது சகஜமாக ஓவியத்திடம்
பேச ஆரம்பித்துவிட்டான். ஓவியமும் இப்படிபோடு, அப்படி கோடு
இழு. அதைக் கொஞ்சம் வளைத்துப் போடு. ஒரு சுழி சுழித்துவிடு
என்று சொல்லச் சொல்ல இவனும் முகத்தை பூர்த்தி பண்ணிவிட்டான்.
முகத்தை பூர்த்தி செய்யவும் மணி அடிக்கவும் சரியாக இருந்தது.
"என்ன, எப்படி வரைஞ்சு இருக்கேன். உனக்கு பிடிச்சிருக்கா?"அன்பு கேட்டான்.
"நல்லா வரைஞ்சுட்டேன்னு சொல்லமுடியாது. பரவாயில்லை. முதலில்
முகத்துக்காக என் மூஞ்சியை அசிங்கமா வரைஞ்சதுக்கு இப்ப எவ்வளவோ
ப்ரவாயில்லை.
நான் இங்கேயே இருப்பேன். நீ வீட்டுக்கு போய் சாப்பிட்டுவிட்டு
இங்க வா. இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணி என் முகத்தை நீ அழகா
போட்டிடலாம், சரியா?" என்றது ஓவியம்.
"ரெம்ப நன்றி. அப்படிப் போடு;இப்படி கோடு இழுன்னு சொன்னீங்க;நீங்க சொல்லலைன்னா அந்த வட்டத்திலேயேதான் இருந்திருப்பேன். சீக்கிரம் வந்துவிடுவேன்,"என்று சொல்லிக் கிளம்பினான்.
வீட்டில் அம்மா என்ன சாப்பாடு போட்டாலும், பிடிக்கலை போ
என்று சொல்லி அடம் பிடிப்பான். இன்று அம்மா தட்டில் போட்டதைச்
சாப்பிட்டான்;தட்டைக் காலிசெய்தான். கையைக் கழுவியதுதான்
தெரியும் பள்ளிக்கூடத்தில் வந்துதான் நின்றான்.
நோட்டைத் திறந்து ஓவியத்தை எடுத்தான்.
"யாரும் வரலை; அதுக்குள்ள சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டாயா?"என்றது
ஓவியம்.
"ஆமா! நீ இருப்பியோ,போயிருவியோன்னு வேகமா வந்துட்டேன்.
சரி இப்பச் சொல்லு. எதையெல்லாம் அழிச்சுட்டுப் போட்டா
முகம் பாக்க நல்லா இருக்கும். நீ சொல்ற. நான் போடுறேன், சரியா," என்றான்
அன்பு.
"அங்க ஒரு பையன் நிக்கிறான் பாரு. அவன் கண்ணைப் பாரு. நீ புருவத்துக்கு
ஒரு கோடு போட்டிருக்கே. அது கொஞ்சம் வளைவா அந்த முடியெல்லாம் இருந்தா இன்னும் நல்லா இருக்கும். அந்தப் பையன் மூக்கு எப்படி இருக்கு பாரு. லேசா அந்த இடத்துல ஒரு வளைவு வந்தா அம்சமா இருக்கும் இல்லையா?
"ஆகா..பாக்கவே இப்ப முகம் நல்லா இருக்கே,"என்றான் அன்பு.
"இன்னும் காது, தலை முடி இதெல்லாம் சரி செய்ய வேண்டும். அந்த
தலைமுடி அப்படி வரக்கூடாது. நீ வகிடு எடுத்து தலை சீவி வருவாயே..
ம்ம்..அப்படித்தான்," ஓவியம் அன்புவுக்கு தனியாக வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தது.
"இப்ப எல்லாமே நல்லா வந்துருக்கு. இன்னைக்கு வாத்தியார் என்னோட
முகம் நல்லா வந்திருக்குன்னு சொல்லப்போறார்,பாரேன்,"என்றான் அன்பு.
"வாய்...பாரு...உதடு...அத ஒரு சின்ன கோடு போட்டு பிரி பாக்கலாம். இன்னும்
கொஞ்சம் வாய் நல்லா வந்துரும்," என்றது ஓவியம்.
"ஆமா..இல்ல...இப்பப் பாரு...சரியா வந்துருச்சு. உதடு அழகா
வந்துருக்கு. இல்லையா?" என்றான் அன்பு.
"எனக்கு இன்னும் திருப்தியாகலை. ஆனாலும் பரவாயில்லை.
இந்த முகம் அழகா..ஓரளவு இருக்கு. அழகா இல்லைன்னு சொல்லமுடியாது,"
என்று முகம் சொல்லியது.
"இந்த அளவுக்கு முகம் நல்லா வந்ததுக்கு நீங்கதான் காரணம். நீங்க
சொல்லச் சொல்லத்தான் நான் திருத்தி வரைந்து இந்த அளவுக்கு
வந்துருக்கு. ரெம்ப நன்றி, சார்"என்றான் அன்பு.
"நான் என்ன செய்தேன். எல்லாம் நீ தானே வரைந்தாய். உன் முயற்சிதான்
அவ்வளவும்;உனக்கு ஆர்வம் அதிகமானதால் சிரத்தையோடு வரைந்தாய்.
இதில் என் பங்கு ஒன்றுமே இல்லை. உன் முயற்சிக்கும் பயிற்சிக்கும்
கிடைத்ததுதான் இந்த முகம்,"என்றது ஓவிய முகம்.
"என்ன இருந்தாலும் ஓவிய ஆசிரியராக இருந்து எனக்குச் சொல்லிக்கொடுத்ததற்கு நன்றி," என்றான்.
மணியடித்தது.
எங்கே வரைந்ததெல்லாம் கொண்டாங்க; ஆசிரியர் சத்தமாகச் சொல்ல
எல்லாம் வரிசையில் போய் கொடுத்தனர்.
"இன்றைக்கு அருமையா வரைஞ்சது யார் தெரியுமா?"ஆசிரியர்
மாணவர்களை நோக்கிக் கேட்டார்.
பின் அவரே சொன்னார். இன்றைக்கு அழகான முகத்தை
வரைந்தது நம் அன்புதான்!"என்றார். அன்பு வரைந்த படத்தை
அனைவருக்கும் காட்டினார். அன்புவுக்கு பெருமையாக இருந்தது.
இரவு, அந்த முகம் படத்தை அவனுடைய மேசையின் மீது வைத்து
நோட்டை அதன் மேல் வைத்துவிட்டு அப்பாவிடம் காலையில்
காட்டவேண்டும் என்று நினைத்துக்கொண்டே போய் படுத்துவிட்டான்.
காலையில் எழுந்ததும், முதல் வேலையாக மேசை மீது போய்
பார்த்தான். அங்கே எதுவும் இல்லை. யார் எடுத்திருப்பார்கள்?
பையைத் திறந்து பார்த்தான். அந்த நோட்டில் முகம்
பாதி மட்டும் வரைந்த தாள் மட்டுமே இருந்தது. முழுவதுமாக
வரைந்த "முகம்" ஓவியம் எங்கே?
ஓவியம் பேசியதெல்லாம் கனவில்தானா? யோசித்துப்பார்த்தான்.
ஓவியம் என்ன சொன்னது?
நான் ஒன்றுமே செய்யவில்லை;செய்ததெல்லாம் நீதான். உன் விடா
முயற்சியும், பயிற்சியும்தான் என்று தானே சொல்லியது. ஆம்! அதுதான்
சரி.
முன்பெல்லாம் எதையாவது வரைய எண்ணி வரைவேன்; சரியா வரலைன்னா
அப்படியே விட்டுவிடுவேன். ஆனால் சரியாக வரும் வரை முயற்சி செய்து
திரும்பத் திரும்ப பயிற்சி செய்யவில்லை. அதனால்தான் படங்கள் வரையும்
முயற்சியில் வெற்றிபெறவில்லை. இப்படியெல்லாம் சிந்தித்தவன் ஒரு
முடிவுக்கு வந்தான்.
அந்த வெள்ளைத்தாளை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தான். முக வட்டத்தை
வரைந்தான். சரியாக வரவில்லை. மீண்டும் முயற்சி செய்தான். சின்னச் சின்ன
மாற்றங்கள் செய்து சரிபார்த்தான். சரியில்லையென்று அழித்தான். போட்டான்.
திருத்தினான். ஒவ்வொன்றுக்கும் தனிக் கவனம் செலுத்தினான். முகம்
வந்துவிட்டதே! மகிழ்ச்சியால் துள்ளினான்.
அதன் பிறகு எப்போது ஓவியம் வரைய வேண்டும் என்றாலும் அன்புவிடம்
ஒரு மாற்றம் காணப்பட்டது. ஏனோதானோவென்று எதையும் வரைவதில்லை.
அது சரியாக இருக்கிறது என்கிற வரை பயிற்சி செய்வான்;விடாமுயற்சியோடு
அழகுபடுத்துவான். திருப்தி பெறும்வரை கவனம் பிசகாமல் அக்கறையோடு,
ஆர்வத்தோடு ஒன்றிவிடுவான். ஒருநாள் நிச்சயம் அன்பு மிகப்பெரிய ஓவியனாக
வருவான்!
<>5சகோதரர்களும் 5 பூக்களும்<>
<<>>5சகோதரர்களும் 5 பூக்களும்<<>>
(இங்கிலாந்து நாட்டுச் சிறுவர் கதை)
அந்தக் கிராமத்தில் 5 முட்டாள் சகோதரர்கள் இருந்தனர். புத்திசாலித்தனத்துக்கும் அவர்களுக்கும் வெகுதூரம். எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அதை திறமையாகச் செய்யாமல் கோணங்கித்தனமாக எதையாவது செய்துவிடுவார்கள்.
ஒரு நாள் காலையில் ,"நம்ம ஊர் காட்டு ஆற்றில் மீன்
பிடிச்சுட்டு வர்றோம்," என்று அம்மாவிடம் சொன்னாங்க.
"நல்ல மீனா புடிச்சுட்டு வாங்க; அருமையா சமைச்சுத் தாரேன்,"அப்டீன்னாங்க,அம்மா.
"இரவுச் சாப்பாட்டுக்கு நாங்க பிடிச்சுட்டு வர்ற மீன் தான்,"என்று மூத்த மகன் சொன்னான்.
"எனக்கும் மீன் ரெம்பப் பிடிக்கும். கவனமா குளத்துல மீன் பிடிங்க. தண்ணீருக்குள் தவறி விழுந்துடப்போறீங்க;கவனம்,"என்று அம்மா புத்திமதி சொல்லி அனுப்பினார்.
"நான் இருக்கேன்;அதெல்லாம் கவலைப்படாதீங்க,"என்றான் மூத்த மகன்.
அடந்த காட்டுக்குள் சென்று அந்த நதியை அடைந்தனர் சகோதரர்கள்.
ஆற்றங்கரையை ஒட்டிய இடத்திலிருந்து தேவையான மண்புழுக்களைச்
சேகரித்தனர்.
மீன் பிடிக்கத் துவங்கினர்; ஒவ்வொருவரும் தங்கள் தூண்டிலை வீசினர்.
"ப்ளாப்"...ப்ளாப்" என்று தூண்டில் தண்ணீரில் விழுந்த சத்தம் கேட்டது.
"ஸ்விஷ்" என்ற சத்தத்தோடு தூண்டிலை எடுத்தான் மூத்தவன். பெரிய
வெள்ளிக்கெண்டை மீன் வந்தது.
கடைசித் தம்பி தூண்டிலில் விழும் மீனை எடுத்து பாத்திரத்தில்
போடும் வேலையைச் செய்தான்.
ஒரு மணி நேரம் ஆனது.
"மொத்தம் எத்தனை மீன் இதுவரை கிடைத்துள்ளது?"என்றான் மூத்த அண்ணன்.
கடைசித் தம்பி மீனை எண்ணி,"இதுவரை 15 மீன்கள் கிடைத்திருக்கிறது,"என்றான்
"அம்மா, ரெம்ப சந்தோசப்படுவாங்க இன்னைக்கு,"என்றான் இரண்டாவது சகோதரன்.
"நேரமாச்சு;மீன் பிடிச்சது போதும். போகலாம்,"என்றான் மூன்றாமவன்.
"நாம எல்லோரும் இங்க இருக்கோமா?"என்றான் நான்காமவன்.
"அஞ்சு பேர் இருக்கிறோமான்னு எண்ணிப்பாத்துட்டாப் போகுது,"என்றான் ஐந்தாவது சகோதரன்.
உடனே மூத்தவன் எண்ணத் துவங்கினான். தனக்கு எதிரில் இருந்த தம்பிகளை
ஒன்று,இரண்டு,மூன்று, நான்கு..."என்று சொல்லி நிறுத்தினான். ஒருத்தன் குறைகிறானே என்றான்..
அடுத்தவன் எண்ணிப்பார்த்தான். ஒன்று,இரண்டு,மூன்று, நான்கு... அட...நான்கு பேர்தான் இருக்கோம்,"என்றான்.
அடுத்தவனும் அதே போல எண்ணினான் அவனுக்கும் நான்கு பேர்தான் எண்ணிக்கை வந்தது.
கடைசியாக ஐந்தாவது சகோதரனும் எண்ணிபார்த்துவிட்டு அழ ஆரம்பித்துவிட்டான்.
"அண்ணே, நாலு பேர்தானே இருக்கோம். அம்மா சொன்னமாதிரி நம்மில் ஒருத்தர் தண்ணீரில்தான் விழுந்திருக்கனும்,"என்று சொல்லி அழுதான்.
"ஆமா..நீ சொல்றது சரிதான்..நம்மில் ஒருத்தரை தொலைத்துவிட்டோம். வாங்க,ஆத்தங்கரை ஓரமா ஓடித் தேடுவோம். தண்ணீரில் தான் விழுந்திருக்க வேண்டும்," என்று மூன்றாமவன் அழுதுகொண்டே சொன்னான்.
சகோதரர்கள் அனைவரும் இப்போது அழுதுகொண்டே வெகுதூரம் ஓடிப்போய்ப் பார்த்தனர். தண்ணீர்தான் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.
என்ன செய்வது என்று தெரியாமல் சோகமாக சகோதரர்கள் அழுது கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு சிறுமி பூக்கூடையுடன் வந்தாள்.
"ஏன் எல்லோரும் அழுகிறீர்கள்? என்ன நடந்தது? "என்று கேட்டாள்.
"மீன் பிடிச்சுக்கிட்டு இருந்தோம். எங்களில் ஒரு சகோதரன் காணோம். தண்ணீரில் தவறி விழுந்து விட்டான் போல. தேடியும் பாத்துட்டோம்,"என்று சொல்லி அழுதான்.
"நான், இப்போது எண்ணிப் பார்க்கிறேன், ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு.."என்று
எண்ணினான். அவன் எண்ணியதை அந்தச் சிறுமி பார்த்துக்கொண்டிருந்தாள்.
"நீங்க மொத்தம் எத்தனை சகோதரர்கள்?"என்று சிறுமி கேட்டாள்.
"நாங்கள் ஐந்து பேர்கள்,"என்றான் இரண்டாமவன்.
பூக்கூடையுடன் வந்த சிறுமி இப்போது புன்னகைத்தாள். "இப்ப நான்,
காணாமல் போன ஐந்தாவது சகோதரனைக் கண்டுபிடித்துத் தரப்போகிறேன்,"என்றாள்.
"எப்படி?"எல்லோரும் ஒரே நேரத்தில் கேட்டனர்.
"இதோ இந்தப் பூக்கள் உதவியுடன்,"என்றாள் சிறுமி.
"பூக்கள் எப்படி உதவி செய்யும்?" அப்பாவியாய்க் கேட்டான் ஐந்தாமவன்.
"இப்ப பாக்கத்தான போறீங்க,"என்றாள் சிறுமி.
"நான் ஒவ்வொரு " பூ" வா கொடுப்பேன். நான் ஒரு பூ கொடுத்ததும் ஒன்று, இரண்டு என்று சொல்வேன். நீங்கள் சொல்லிக்கொண்டே வரவேண்டும் சரியா?"என்று சொல்லி முதலவதாக ஒருவனிடம் பூவைக் கொடுத்தாள்.
"ஒன்று" பூவை வாங்கிக்கொண்டு அவனும் ஒன்று என்றான்.
"இரண்டு" பூவை வாங்கிய இரண்டாமவனும் "இரண்டு"என்றான்.
"மூன்றாவது பூவை வாங்கியவன் மூன்று, நான்காவது பூவை வாங்கியவன்
நான்கு, ஐந்தாவது பூவை வாங்கியவன் ஐந்து என்றான்.
"பார்த்தீர்களா? காணாமல் போன ஐந்தாவது சகோதரனைக் கண்டுபிடித்துவிட்டேன், இல்லையா?"என்றாள்.
"ஆமாம். நீ, கண்டுபிடிச்சுக் குடுத்திட்ட," என்று மூத்தவன் சந்தோசமாகக் கத்தினான்.
"உனக்கு ரெம்ப நன்றி" என்றான் ஒருவன்.
"இப்ப எங்க அம்மா சந்தோசப்படுவாங்க" என்றான் இன்னொருவன்.
"எங்களுக்கும் இப்ப சந்தோசம். காணாமல் போன சகோதரனைக் கண்டு
பிடித்ததற்காக உனக்கு இரண்டு மீன்,"என்று மூத்தவன் அந்தச் சிறுமிக்கு கொடுத்தான்.
அந்தச் சிறுமியும் இரண்டு மீன்களோடு சந்தோசமாக அவளுடைய வீட்டை
நோக்கிப் போனாள்.
மீனோடு சகோதரர்கள் ஐவரும்,உற்சாகமாக வீடு திரும்பினார்கள்.
"என் செல்லங்கள் இவ்வளவு மீன் பிடிச்சிருக்கீங்களே; நீங்கள்
கெட்டிக்காரர்கள்,"என்று அம்மா பாராட்டினாள்.
"நாங்க யாரும் தண்ணீரில் விழவில்லை. வேணும்ன்னா இந்தப் பூவை
வச்சு எங்களை எண்ணிப்பாத்துக்கங்கம்மா,"என்றான் கடைசி மகன்.
ஆனால்,அம்மாவுக்குத் தெரியுமோ!?காணாமல் போன சகோதரனைக் கண்டு
பிடிக்க உதவியது அந்தப் பூக்கள்தான் என்று!
(இங்கிலாந்து நாட்டுச் சிறுவர் கதை)
அந்தக் கிராமத்தில் 5 முட்டாள் சகோதரர்கள் இருந்தனர். புத்திசாலித்தனத்துக்கும் அவர்களுக்கும் வெகுதூரம். எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அதை திறமையாகச் செய்யாமல் கோணங்கித்தனமாக எதையாவது செய்துவிடுவார்கள்.
ஒரு நாள் காலையில் ,"நம்ம ஊர் காட்டு ஆற்றில் மீன்
பிடிச்சுட்டு வர்றோம்," என்று அம்மாவிடம் சொன்னாங்க.
"நல்ல மீனா புடிச்சுட்டு வாங்க; அருமையா சமைச்சுத் தாரேன்,"அப்டீன்னாங்க,அம்மா.
"இரவுச் சாப்பாட்டுக்கு நாங்க பிடிச்சுட்டு வர்ற மீன் தான்,"என்று மூத்த மகன் சொன்னான்.
"எனக்கும் மீன் ரெம்பப் பிடிக்கும். கவனமா குளத்துல மீன் பிடிங்க. தண்ணீருக்குள் தவறி விழுந்துடப்போறீங்க;கவனம்,"என்று அம்மா புத்திமதி சொல்லி அனுப்பினார்.
"நான் இருக்கேன்;அதெல்லாம் கவலைப்படாதீங்க,"என்றான் மூத்த மகன்.
அடந்த காட்டுக்குள் சென்று அந்த நதியை அடைந்தனர் சகோதரர்கள்.
ஆற்றங்கரையை ஒட்டிய இடத்திலிருந்து தேவையான மண்புழுக்களைச்
சேகரித்தனர்.
மீன் பிடிக்கத் துவங்கினர்; ஒவ்வொருவரும் தங்கள் தூண்டிலை வீசினர்.
"ப்ளாப்"...ப்ளாப்" என்று தூண்டில் தண்ணீரில் விழுந்த சத்தம் கேட்டது.
"ஸ்விஷ்" என்ற சத்தத்தோடு தூண்டிலை எடுத்தான் மூத்தவன். பெரிய
வெள்ளிக்கெண்டை மீன் வந்தது.
கடைசித் தம்பி தூண்டிலில் விழும் மீனை எடுத்து பாத்திரத்தில்
போடும் வேலையைச் செய்தான்.
ஒரு மணி நேரம் ஆனது.
"மொத்தம் எத்தனை மீன் இதுவரை கிடைத்துள்ளது?"என்றான் மூத்த அண்ணன்.
கடைசித் தம்பி மீனை எண்ணி,"இதுவரை 15 மீன்கள் கிடைத்திருக்கிறது,"என்றான்
"அம்மா, ரெம்ப சந்தோசப்படுவாங்க இன்னைக்கு,"என்றான் இரண்டாவது சகோதரன்.
"நேரமாச்சு;மீன் பிடிச்சது போதும். போகலாம்,"என்றான் மூன்றாமவன்.
"நாம எல்லோரும் இங்க இருக்கோமா?"என்றான் நான்காமவன்.
"அஞ்சு பேர் இருக்கிறோமான்னு எண்ணிப்பாத்துட்டாப் போகுது,"என்றான் ஐந்தாவது சகோதரன்.
உடனே மூத்தவன் எண்ணத் துவங்கினான். தனக்கு எதிரில் இருந்த தம்பிகளை
ஒன்று,இரண்டு,மூன்று, நான்கு..."என்று சொல்லி நிறுத்தினான். ஒருத்தன் குறைகிறானே என்றான்..
அடுத்தவன் எண்ணிப்பார்த்தான். ஒன்று,இரண்டு,மூன்று, நான்கு... அட...நான்கு பேர்தான் இருக்கோம்,"என்றான்.
அடுத்தவனும் அதே போல எண்ணினான் அவனுக்கும் நான்கு பேர்தான் எண்ணிக்கை வந்தது.
கடைசியாக ஐந்தாவது சகோதரனும் எண்ணிபார்த்துவிட்டு அழ ஆரம்பித்துவிட்டான்.
"அண்ணே, நாலு பேர்தானே இருக்கோம். அம்மா சொன்னமாதிரி நம்மில் ஒருத்தர் தண்ணீரில்தான் விழுந்திருக்கனும்,"என்று சொல்லி அழுதான்.
"ஆமா..நீ சொல்றது சரிதான்..நம்மில் ஒருத்தரை தொலைத்துவிட்டோம். வாங்க,ஆத்தங்கரை ஓரமா ஓடித் தேடுவோம். தண்ணீரில் தான் விழுந்திருக்க வேண்டும்," என்று மூன்றாமவன் அழுதுகொண்டே சொன்னான்.
சகோதரர்கள் அனைவரும் இப்போது அழுதுகொண்டே வெகுதூரம் ஓடிப்போய்ப் பார்த்தனர். தண்ணீர்தான் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.
என்ன செய்வது என்று தெரியாமல் சோகமாக சகோதரர்கள் அழுது கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு சிறுமி பூக்கூடையுடன் வந்தாள்.
"ஏன் எல்லோரும் அழுகிறீர்கள்? என்ன நடந்தது? "என்று கேட்டாள்.
"மீன் பிடிச்சுக்கிட்டு இருந்தோம். எங்களில் ஒரு சகோதரன் காணோம். தண்ணீரில் தவறி விழுந்து விட்டான் போல. தேடியும் பாத்துட்டோம்,"என்று சொல்லி அழுதான்.
"நான், இப்போது எண்ணிப் பார்க்கிறேன், ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு.."என்று
எண்ணினான். அவன் எண்ணியதை அந்தச் சிறுமி பார்த்துக்கொண்டிருந்தாள்.
"நீங்க மொத்தம் எத்தனை சகோதரர்கள்?"என்று சிறுமி கேட்டாள்.
"நாங்கள் ஐந்து பேர்கள்,"என்றான் இரண்டாமவன்.
பூக்கூடையுடன் வந்த சிறுமி இப்போது புன்னகைத்தாள். "இப்ப நான்,
காணாமல் போன ஐந்தாவது சகோதரனைக் கண்டுபிடித்துத் தரப்போகிறேன்,"என்றாள்.
"எப்படி?"எல்லோரும் ஒரே நேரத்தில் கேட்டனர்.
"இதோ இந்தப் பூக்கள் உதவியுடன்,"என்றாள் சிறுமி.
"பூக்கள் எப்படி உதவி செய்யும்?" அப்பாவியாய்க் கேட்டான் ஐந்தாமவன்.
"இப்ப பாக்கத்தான போறீங்க,"என்றாள் சிறுமி.
"நான் ஒவ்வொரு " பூ" வா கொடுப்பேன். நான் ஒரு பூ கொடுத்ததும் ஒன்று, இரண்டு என்று சொல்வேன். நீங்கள் சொல்லிக்கொண்டே வரவேண்டும் சரியா?"என்று சொல்லி முதலவதாக ஒருவனிடம் பூவைக் கொடுத்தாள்.
"ஒன்று" பூவை வாங்கிக்கொண்டு அவனும் ஒன்று என்றான்.
"இரண்டு" பூவை வாங்கிய இரண்டாமவனும் "இரண்டு"என்றான்.
"மூன்றாவது பூவை வாங்கியவன் மூன்று, நான்காவது பூவை வாங்கியவன்
நான்கு, ஐந்தாவது பூவை வாங்கியவன் ஐந்து என்றான்.
"பார்த்தீர்களா? காணாமல் போன ஐந்தாவது சகோதரனைக் கண்டுபிடித்துவிட்டேன், இல்லையா?"என்றாள்.
"ஆமாம். நீ, கண்டுபிடிச்சுக் குடுத்திட்ட," என்று மூத்தவன் சந்தோசமாகக் கத்தினான்.
"உனக்கு ரெம்ப நன்றி" என்றான் ஒருவன்.
"இப்ப எங்க அம்மா சந்தோசப்படுவாங்க" என்றான் இன்னொருவன்.
"எங்களுக்கும் இப்ப சந்தோசம். காணாமல் போன சகோதரனைக் கண்டு
பிடித்ததற்காக உனக்கு இரண்டு மீன்,"என்று மூத்தவன் அந்தச் சிறுமிக்கு கொடுத்தான்.
அந்தச் சிறுமியும் இரண்டு மீன்களோடு சந்தோசமாக அவளுடைய வீட்டை
நோக்கிப் போனாள்.
மீனோடு சகோதரர்கள் ஐவரும்,உற்சாகமாக வீடு திரும்பினார்கள்.
"என் செல்லங்கள் இவ்வளவு மீன் பிடிச்சிருக்கீங்களே; நீங்கள்
கெட்டிக்காரர்கள்,"என்று அம்மா பாராட்டினாள்.
"நாங்க யாரும் தண்ணீரில் விழவில்லை. வேணும்ன்னா இந்தப் பூவை
வச்சு எங்களை எண்ணிப்பாத்துக்கங்கம்மா,"என்றான் கடைசி மகன்.
ஆனால்,அம்மாவுக்குத் தெரியுமோ!?காணாமல் போன சகோதரனைக் கண்டு
பிடிக்க உதவியது அந்தப் பூக்கள்தான் என்று!
<<>>முட்டாள் ராஜாவின் முடிவு.<<>>
<<>>முட்டாள் ராஜாவின் முடிவு.<<>>
தமிழண்ணா, அமெரிக்கா.
அந்த நாட்டில் ஒரு ராஜா. அந்த ராஜா, தன் மனம் போன
போக்கில் ஆட்சி செய்தான். திடீர், திடீரென்று மக்களுக்கு
முட்டாள்தனமாக கட்டளை பிறப்பிப்பான்.
நல்லவர்களுக்குத்தண்டனை கொடுப்பான். கொலைகாரனை,
கொள்ளைக்காரனை விடுதலை செய்வான். அவனிடம் இல்லாததால்
திருடினான். தப்பு செய்தவனை கொலை செய்தான். அதில்தவறு ஏதும்
இல்லை என்று சொல்வான், முட்டாள் ராஜா.
யாராவது நியாயம் சொல்கிறேன் என்று போனால் அவர்கள் தலையை சீவும்படி உத்திரவிடுவான்.
இதற்குப் பயந்துமுட்டாள் ராஜாவை யாரும் நெருங்குவதில்லை. இந்த முட்டாள் ராஜவை ஒழித்துக் கட்ட யாராவது முன்வரமாட்டார்களா என்று ஏங்கினார்கள்.
அந்தச் சந்தர்ப்பமும்ஒருநாள் வந்தது.
அந்தப் பட்டணத்தில் ஒரு பெரிய பணக்காரர். அந்தப் பணக்காரர் வீட்டில்
திருட நினைத்தான், ஒரு திருடன். ஒருநாள் தன் குடும்பத்தோடு அந்தப்பணக்காரார், வெளியூருக்குக்கிளம்பினார். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று திருடன் பணக்காரர் வீட்டில் சுவர் ஏறிக் குதித்து உள்ளே நுழைந்தான்.
பணக்காரர் பாதுகாப்பாகத் தங்க நகைகள், காசை எல்லாம் வைத்து இருந்த ஒரு பெரிய இரும்புப் பெட்டியைக் கண்டுபிடித்தும் விட்டான். ஆனால் என்ன முயன்றும் அந்த இரும்புப் பெட்டியைத் திறக்கமுடியவில்லை. இரும்புப் பெட்டியும்தூக்கிச் செல்லக் கூடியதாக இல்லை. அங்கிருந்த கடப்பாரையின் உதவியால் இரும்புப் பெட்டியைச் சுவர் ஓரமாக நகர்த்தினான். பின்னர் சுவரை இடித்து அந்தத் துவாரம்வழியாக வீட்டுக்கு வெளியே தள்ளிவிட்டு இவனும் குதித்தான்.
அப்போது, மறந்துவைத்து விட்டுப் போன பொருளை எடுக்க வந்த பணக்காரரிடம் திருடன் வசமாக மாட்டிக் கொண்டான். திருடனைக் கொண்டுபோய் ராஜா முன்னால் நிறுத்தினார், பணக்காரர். முட்டாள் ராஜா விசாரணையைத் துவக்கினார்.
பணக்காரர் நடந்ததைச் சொன்னார். திருடனுக்குத் தக்க தண்டனை வழங்க
வேண்டும் என்றும் பணக்காரர் கேட்டுக் கொண்டார்.
உடனே திருடன், " மக்கள் போற்றும் மகாராஜாவே! நான் எனது நகை வைத்திருந்த இரும்புப் பெட்டியின் சாவியைத் தொலைத்துவிட்டேன். மாற்றுச் சாவி போடுவதற்காக எடுத்துப்போனேன். வழியில் பார்த்த இவர் என் பணப்பெட்டியை அபகரிக்க எண்ணி இப்படி நாடகமாடுகிறார், என்று அழகாக ஒரு பொய்யைச் சொன்னான் திருடன்.
பணக்காரர் எதோ சொல்ல வாய் திறந்தார். உடனே முட்டாள் ராஜா, " நீ பேச வேண்டாம். அடுத்தவர் சொத்தை அபகரித்தே நீ பணக்காரனாகிவிட்டாய். யாரங்கே? இந்தப் பணக்காரனைச் சிறையில் தள்ளுங்கள், " என்று உத்திரவிட்டான்.
பணக்காரர் பார்த்தார். ஆயுள் முழுக்க முட்டாள் ராஜா சிறையில் வைத்துவிடுவானே, என்று சமயோசிதமாக ராஜாவிடம் பேசினார்.
" அண்டைநாடெல்லாம் புகழும் அருமை ராஜாவே! என்னிடம் இருப்பது போன்ற அதே மாதிரி இரும்புப் பெட்டியை செய்து இவரிடம் விற்ற ஆசாரி தான் இதற்கெல்லாம் காரணம். எனவே தண்டிக்கப்பட்வேண்டியது அந்த இரும்புப் பெட்டியைச் செய்த ஆசாரிதான், ராஜாவே " என்றார் பணக்காரர்.
உடனே ராஜா, " பணக்காரர் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. இரும்புப் பெட்டியைச் செய்த ஆசாரியை கூட்டிவரும்படி உத்திரவிட்டான். ஆசாரி வந்ததும்," நீ ஏன் ஒரே மாதிரி இரும்புப் பெட்டியைச் செய்து கொடுத்தாய்? உன்னால் பணக்காரர் ஜெயிலுக்குப் போகவேண்டிய நிலையை உருவாக்கிவிட்டாய். இந்தக்குற்றத்திற்கு உனக்கு நான் மரண தண்டனை
விதிக்கிறேன்,"என்றார் முட்டாள் ராஜா. ஆசாரி பார்த்தார்.
முட்டாள் ராஜாவிடம் உண்மையைச் சொன்னாலும் எடுபடாது. தான் தப்பித்தால் போதும் என்று, " ஏழுலகம் புகழும் ராஜாவே! இந்தத் தவறுக்கு நான் காரணமல்ல. எனது வேலைக்காரன் செய்த தவறு. எனவே என் வேலைக்காரன்தான் தண்டிக்கப்படவேண்டும்," என்றான் சாரி.
"அடடே! அப்படியா! நல்ல வேளை. நான் உன்னைத் தண்டிக்க மாட்டேன். நீபோகலாம். உன் வேலைக்காரனைத் தண்டிக்கிறேன்," என்றார் ராஜா.
வேலைக்காரன் வந்தான்." உன்னால் அநியாயமாக உன் முதலாளியும், பணக்காரரும் சிறைக்குப் போக இருந்தார்கள். ஒரே மாதிரி இரும்புப் பெட்டி செய்து குழப்பத்துக்கு காரணமான உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன்." என்றர் முட்டாள் ராஜா.
வேலைக்காரன் தன் தலையைக் காப்பாற்றிக்கொள்ள அவனும் ஒரு பொய் சொன்னான்.
" ராஜாவுக்கெல்லாம் ராஜாவே! நான் இரும்புப் பெட்டி செய்து கொண்டிருக்கும்போது அந்தவழியாக ஒரு இளம்பெண் வந்தாள்.
அவள் அழகில் மயங்கிவிட்டதால், முதலில்செய்த பெட்டியைப் போலவே
இரண்டாவதையும் செய்ய நேர்ந்தது. அந்தப் பெண் என் வேலை நேரத்தில்
குறுக்கிடாமலிருந்தால் இந்தத் தவறே நடந்திருக்காது. எனவேதாங்கள் அந்தப்
பெண்ணைத்தான் தண்டிக்கவேண்டும்," என்றான் வேலைக்காரன்.
" நல்லவேளை! உன்மையைச் சொன்னாய். உன்மையைச் சொன்னதால்
தப்பினாய். நீபோகலாம். அந்தப் பெண்ணைத் தூக்கிலிடுகிறேன்," என்றான்
முட்டாள் ராஜா.காவலர்கள் அந்தப் பெண்ணை அழைத்து வந்து ராஜா
முன்பாக நிறுத்தினர்.
"ஆசாரியின் வேலையாள் வேலை செய்து கொண்டிருக்கும்போது நீ ஏன்?
அந்தப்பக்கம் போனாய். உன்னால் எத்தனை விபரீதம் நடந்துவிட்டது
தெரியுமா? உன்னைத் தூக்கிலிட்டு இந்த விவகாரத்தை முடிக்கப்போகிறேன்,"
என்றார் ராஜா.
மதி கெட்ட ராஜாவிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மதி நுட்பமாக
பதில் சொன்னாள் அந்தப்பெண்.
"உலகம் போற்றும் உத்தம ராஜாவே! நான் நாட்டியம் கற்றுக்கொள்ள அந்தவழியாகத்தான் போயாக வேண்டும். நாட்டியம் சொல்லித்தரும் ஆசிரியர் விரைந்து கற்றுக் கொடுக்காமல் காலை, மாலை என்று அடிக்கடி வரச் சொன்னதால் நான் அந்த வழியாகப் போக வேண்டி வந்தது. என்னை நாட்டியம் கற்க அடிக்கடி வரச் சொன்ன நாட்டிய ஆசிரியரைத்தான் நீங்கள் தண்டிக்கவேண்டும்," என்றாள் அந்தப்பெண்.
"அப்படியா! நீ போகலாம். நாட்டிய ஆசிரியர் தான் உண்மைக் குற்றவாளி என்று
அறிந்து கொண்டேன், என்று சொன்னராஜா நாட்டிய ஆசிரியரை கைது செய்து
கொண்டு வரும்படி உத்திரவிட்டான்.
நாட்டிய ஆசிரியரோ அப்பாவி. அவருக்கு புகார், வழக்கு எதுவும் புரியவில்லை.
ராஜாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு புரியலை. மெளனமாக நின்றார்.
உடனே முட்டாள் ராஜா, இவன்தான் குற்றவாளி என்று கண்டுபிடித்துவிட்டேன், என்று கூறி உரக்கச் சிரித்தான்.
நாளை சூரிய உதயத்தின் போது நடன ஆசிரியர் பொதுமக்கள் முன்னிலையில்
தூக்கிலிட உத்திரவிடுகிறேன். இனிமேல் அவன் காரணம். இவன் காரணம், என்று சொல்லி யாரும் தப்பிக்கமுடியாது; இந்த வழக்கு அதற்கு உதாரணமாகவும் தவறு செய்பவர்களுக்கு எச்சரிக்கையாகவும் இருக்கும்! இதை நாட்டு மக்களுக்கு சேனாதிபதி அறிவிக்க கட்டளையிடுகிறேன்," என்று முட்டாள் ராஜா மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்.
நடன ஆசிரியர் மனைவி பக்கத்துவீட்டில் வசிக்கும் வீரசேணன் என்ற
வாலிபரிடம் சொல்லி எப்படியாவது தன்கணவரைக் காப்பாற்றவேண்டும்
என்று கெஞ்சி அழுதாள்.
வீர சேணன் புத்திசாலி. அழாதீர்கள். முட்டாள் ராஜாவின் பைத்தியக்காரத்
தனத்துக்கு ஒரு முடிவு கட்டிவிட்டு உங்கள் கணவரை நான் மீட்டு வருகிறேன்," என்று தைரியம்சொன்னான்.
வீர சேணன் தன் நண்பனை அழைத்து தனது திட்டத்தை அவனிடம் சொல்லி,
சரியான நேரத்தில் தூக்கு மேடை மைதானத்துக்கு வந்துவிடவேண்டும் என்று
சொல்லி அனுப்பினான்.
தூக்கிலிடும் நேரம் நெருங்க, நெருங்க மக்கள் கூட்டமும் அதிகரித்தது. முட்டாள் ராஜா தனது பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தான். இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா? என்று பொதுமக்கள் வேதனையோடு பேசிக்கொண்டனர்.
நாட்டிய ஆசிரியரின் மனைவி சிந்திய மூக்கும் அழுத கண்ணீருமாக அங்கே
பார்ப்பவர்கள் மனது கலங்கநின்று கொண்டிருந்தார். அப்போது முட்டாள்
ராஜாவின் மெய்க்காப்பாளரோடு யாரோ உரத்த குரலில் சத்தம் போட்டு பேச
ராஜா, என்ன சப்தம் அங்கே? என்று கேட்டான்.
"தங்களைப் பார்த்தே ஆகவேண்டுமென்று இருவர் தகராறு செய்கிறார்கள்.
தூக்குத்தண்டனை நிறைவேற்றிய பிறகு ராஜாவை அவையில் சந்திக்கலாம்
என்று சொன்னோம். ஆனால் நாட்டிய ஆசிரியருக்குப் பதிலாக தாங்கள்
அந்தத் தண்டனையை ஏற்கவேண்டும்.
அதனால் ராஜாவை இப்போதே சந்தித்தாக வேண்டும் என்று பிடிவாதம்
பிடிக்கின்றனர்," என்று மெய்காப்பாளர் ராஜாவிடம் தெரிவித்தார்.
அழைத்து வாருங்கள் என்று வரப்போகும் ஆபத்தை அறியாமல்,
ராஜா மீசையை நீவிவிட்டுக்கொண்டே ராஜ கம்பீரமாகச் சொன்னார்.
வீரசேணனும் அவனது நண்பனும் ராஜா முன் நிறுத்தப்பட்டனர்.
உடனே சற்றும் தாமதிக்காமல் வீரசேணன், " ராஜனுக்கெல்லாம்
ராஜனே! நீதி நெறி தவறாது ஆட்சி நடத்தும் மகாராஜாவே! உன் புகழ் ஓங்குக!
நாட்டிய ஆசிரியருக்குப்பதிலாக என்னைத் தூக்கிலிடுங்கள் உங்களுக்குக்
கோடிப்புண்ணியம், " என்றான் வீரசேணன்.
உடனே சற்றும் தாமதிக்காமல் வீரசேணனின் நண்பன், " இல்லை மகாராஜா,
என்னைத்தான் நீங்கள் தூக்கிலிட வேண்டும் " என்றான்.
ராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. "பயித்தியமா பிடித்திருக்கிறது உங்களுக்கு.
தூக்கில் தொங்க நான், நீ என்று போட்டி போடுகிறீர்களே? சரியான மடையர்களாக இருக்கிறீர்களே! " என்றான் ராஜா.
வீரசேணனின் நண்பன்," எக்காரணம் கொண்டும் இவனைத் தூக்கில் போடாதீர்கள். என்னைத் தூக்கில் போடுங்கள், என்றான் ராஜாவிடம். " ஆசையைப் பாரு, நீ ராஜா ஆயிடலாம்னு பாக்குறியா? நான் விடமாட்டேன். ராஜா, என்னைத் தூக்கிலிடுங்கள், என்றான் வீரசேணன் அவசர,அவசரமாக.
ராஜாவுக்கு கோபம் வந்துவிட்டது. " என்ன உளறுகிறீர்கள்? தூக்கிலிட்டால் ராஜா ஆகி விடுவீர்களா? புரியும்படி சொல்லாவிட்டால் இப்போதே உங்கள் இருவர் தலையையும் சீவிவிடுவேன், என்றார் ராஜா.
"ராஜா! முக்காலமும் உணர்ந்த மாமுனிவரைச் சந்தித்தோம். அவர்தான் சொன்னார்.
ராஜாவின் கட்டளையால் யார் இந்த நேரத்தில் தூக்கிலிடப்பட்டு மரணமடைகிறாரோ, அவர் இந்த தேசத்துக்கு அடுத்த ராஜா! அதுமட்டுமல்ல, அந்த ராஜாவுக்கு சாவே கிடையாது, என்று சொன்னார். அதனால்தான் ராஜா ஆகும் ஆசையில் நாங்கள் எங்களைத் தூக்கிலிடும்படி கேட்டோம்," என்றான் வீரசேணன்.
வீரசேணனின் நண்பன் வேகமாக," முனிவர் என்னிடம்தான் முதலில் சொன்னார். எனவே, என்னைத்தான் தூக்கிலிட நீங்கள் கட்டளையிட வேண்டும், என்றான்.
ராஜா கடகடவென சிரித்தான். "இதைக் கேட்டபின்னும் உங்களைத் தூக்கிலிட
நான் என்ன முட்டாளா? தளபதியே நாட்டிய ஆசிரியருக்குப் பதிலாக
என்னைக் காலதாமதமின்றி தூக்கிலிடுங்கள். இது ராஜகட்டளை! உடனே
நிறைவேறட்டும்..ம்ம்... ,"என்றான் முட்டாள் ராஜா.
அப்புறம் என்ன? ராஜாவின் விருப்பப்படியே ராஜா தூக்கிலிடப்பட்டான்.
முட்டாள் ராஜாவை சமயோசிதமாக தூக்கிலிட வைத்த வீரசேணனை
பொதுமக்கள் அந்த இடத்திலேயே ராஜாவாக்கினர்.
நாட்டிய ஆசிரியரும் அவரின் மனைவியும் வீரசேணனுக்கும் அவனது
நண்பனுக்கும் நன்றி தெரிவித்தனர். முட்டாள் ராஜா முட்டாள்தனமாகவே
ஒழிந்ததில் அந்தநாட்டு மக்கள் சந்தோஷமாகக் கொண்டாடினர்.
நீதி:- முட்டாளிடம் நியாயம்,உபதேசம் எல்லாம் பேசி நேர விரயம்
செய்யக்கூடாது. ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கனும்; பாடுற மாட்டை பாடித்தான் கறக்கனும் என்ற முதுமொழி உண்டு. சில நேரங்களில் புத்திசாலித்தனமாக செயல்பட்டால்தான் முட்டாள்களை வெற்றிகானமுடியும்.
முட்டாள் தனமாகப் பேசுபவரிடம் நம் பொன்னான நேரத்தைச் செலவு செய்யக்கூடாது. அது கண்ணைத் திறந்துகொண்டே
கிணற்றில் விழுவது போல!
தமிழண்ணா, அமெரிக்கா.
அந்த நாட்டில் ஒரு ராஜா. அந்த ராஜா, தன் மனம் போன
போக்கில் ஆட்சி செய்தான். திடீர், திடீரென்று மக்களுக்கு
முட்டாள்தனமாக கட்டளை பிறப்பிப்பான்.
நல்லவர்களுக்குத்தண்டனை கொடுப்பான். கொலைகாரனை,
கொள்ளைக்காரனை விடுதலை செய்வான். அவனிடம் இல்லாததால்
திருடினான். தப்பு செய்தவனை கொலை செய்தான். அதில்தவறு ஏதும்
இல்லை என்று சொல்வான், முட்டாள் ராஜா.
யாராவது நியாயம் சொல்கிறேன் என்று போனால் அவர்கள் தலையை சீவும்படி உத்திரவிடுவான்.
இதற்குப் பயந்துமுட்டாள் ராஜாவை யாரும் நெருங்குவதில்லை. இந்த முட்டாள் ராஜவை ஒழித்துக் கட்ட யாராவது முன்வரமாட்டார்களா என்று ஏங்கினார்கள்.
அந்தச் சந்தர்ப்பமும்ஒருநாள் வந்தது.
அந்தப் பட்டணத்தில் ஒரு பெரிய பணக்காரர். அந்தப் பணக்காரர் வீட்டில்
திருட நினைத்தான், ஒரு திருடன். ஒருநாள் தன் குடும்பத்தோடு அந்தப்பணக்காரார், வெளியூருக்குக்கிளம்பினார். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று திருடன் பணக்காரர் வீட்டில் சுவர் ஏறிக் குதித்து உள்ளே நுழைந்தான்.
பணக்காரர் பாதுகாப்பாகத் தங்க நகைகள், காசை எல்லாம் வைத்து இருந்த ஒரு பெரிய இரும்புப் பெட்டியைக் கண்டுபிடித்தும் விட்டான். ஆனால் என்ன முயன்றும் அந்த இரும்புப் பெட்டியைத் திறக்கமுடியவில்லை. இரும்புப் பெட்டியும்தூக்கிச் செல்லக் கூடியதாக இல்லை. அங்கிருந்த கடப்பாரையின் உதவியால் இரும்புப் பெட்டியைச் சுவர் ஓரமாக நகர்த்தினான். பின்னர் சுவரை இடித்து அந்தத் துவாரம்வழியாக வீட்டுக்கு வெளியே தள்ளிவிட்டு இவனும் குதித்தான்.
அப்போது, மறந்துவைத்து விட்டுப் போன பொருளை எடுக்க வந்த பணக்காரரிடம் திருடன் வசமாக மாட்டிக் கொண்டான். திருடனைக் கொண்டுபோய் ராஜா முன்னால் நிறுத்தினார், பணக்காரர். முட்டாள் ராஜா விசாரணையைத் துவக்கினார்.
பணக்காரர் நடந்ததைச் சொன்னார். திருடனுக்குத் தக்க தண்டனை வழங்க
வேண்டும் என்றும் பணக்காரர் கேட்டுக் கொண்டார்.
உடனே திருடன், " மக்கள் போற்றும் மகாராஜாவே! நான் எனது நகை வைத்திருந்த இரும்புப் பெட்டியின் சாவியைத் தொலைத்துவிட்டேன். மாற்றுச் சாவி போடுவதற்காக எடுத்துப்போனேன். வழியில் பார்த்த இவர் என் பணப்பெட்டியை அபகரிக்க எண்ணி இப்படி நாடகமாடுகிறார், என்று அழகாக ஒரு பொய்யைச் சொன்னான் திருடன்.
பணக்காரர் எதோ சொல்ல வாய் திறந்தார். உடனே முட்டாள் ராஜா, " நீ பேச வேண்டாம். அடுத்தவர் சொத்தை அபகரித்தே நீ பணக்காரனாகிவிட்டாய். யாரங்கே? இந்தப் பணக்காரனைச் சிறையில் தள்ளுங்கள், " என்று உத்திரவிட்டான்.
பணக்காரர் பார்த்தார். ஆயுள் முழுக்க முட்டாள் ராஜா சிறையில் வைத்துவிடுவானே, என்று சமயோசிதமாக ராஜாவிடம் பேசினார்.
" அண்டைநாடெல்லாம் புகழும் அருமை ராஜாவே! என்னிடம் இருப்பது போன்ற அதே மாதிரி இரும்புப் பெட்டியை செய்து இவரிடம் விற்ற ஆசாரி தான் இதற்கெல்லாம் காரணம். எனவே தண்டிக்கப்பட்வேண்டியது அந்த இரும்புப் பெட்டியைச் செய்த ஆசாரிதான், ராஜாவே " என்றார் பணக்காரர்.
உடனே ராஜா, " பணக்காரர் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. இரும்புப் பெட்டியைச் செய்த ஆசாரியை கூட்டிவரும்படி உத்திரவிட்டான். ஆசாரி வந்ததும்," நீ ஏன் ஒரே மாதிரி இரும்புப் பெட்டியைச் செய்து கொடுத்தாய்? உன்னால் பணக்காரர் ஜெயிலுக்குப் போகவேண்டிய நிலையை உருவாக்கிவிட்டாய். இந்தக்குற்றத்திற்கு உனக்கு நான் மரண தண்டனை
விதிக்கிறேன்,"என்றார் முட்டாள் ராஜா. ஆசாரி பார்த்தார்.
முட்டாள் ராஜாவிடம் உண்மையைச் சொன்னாலும் எடுபடாது. தான் தப்பித்தால் போதும் என்று, " ஏழுலகம் புகழும் ராஜாவே! இந்தத் தவறுக்கு நான் காரணமல்ல. எனது வேலைக்காரன் செய்த தவறு. எனவே என் வேலைக்காரன்தான் தண்டிக்கப்படவேண்டும்," என்றான் சாரி.
"அடடே! அப்படியா! நல்ல வேளை. நான் உன்னைத் தண்டிக்க மாட்டேன். நீபோகலாம். உன் வேலைக்காரனைத் தண்டிக்கிறேன்," என்றார் ராஜா.
வேலைக்காரன் வந்தான்." உன்னால் அநியாயமாக உன் முதலாளியும், பணக்காரரும் சிறைக்குப் போக இருந்தார்கள். ஒரே மாதிரி இரும்புப் பெட்டி செய்து குழப்பத்துக்கு காரணமான உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன்." என்றர் முட்டாள் ராஜா.
வேலைக்காரன் தன் தலையைக் காப்பாற்றிக்கொள்ள அவனும் ஒரு பொய் சொன்னான்.
" ராஜாவுக்கெல்லாம் ராஜாவே! நான் இரும்புப் பெட்டி செய்து கொண்டிருக்கும்போது அந்தவழியாக ஒரு இளம்பெண் வந்தாள்.
அவள் அழகில் மயங்கிவிட்டதால், முதலில்செய்த பெட்டியைப் போலவே
இரண்டாவதையும் செய்ய நேர்ந்தது. அந்தப் பெண் என் வேலை நேரத்தில்
குறுக்கிடாமலிருந்தால் இந்தத் தவறே நடந்திருக்காது. எனவேதாங்கள் அந்தப்
பெண்ணைத்தான் தண்டிக்கவேண்டும்," என்றான் வேலைக்காரன்.
" நல்லவேளை! உன்மையைச் சொன்னாய். உன்மையைச் சொன்னதால்
தப்பினாய். நீபோகலாம். அந்தப் பெண்ணைத் தூக்கிலிடுகிறேன்," என்றான்
முட்டாள் ராஜா.காவலர்கள் அந்தப் பெண்ணை அழைத்து வந்து ராஜா
முன்பாக நிறுத்தினர்.
"ஆசாரியின் வேலையாள் வேலை செய்து கொண்டிருக்கும்போது நீ ஏன்?
அந்தப்பக்கம் போனாய். உன்னால் எத்தனை விபரீதம் நடந்துவிட்டது
தெரியுமா? உன்னைத் தூக்கிலிட்டு இந்த விவகாரத்தை முடிக்கப்போகிறேன்,"
என்றார் ராஜா.
மதி கெட்ட ராஜாவிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மதி நுட்பமாக
பதில் சொன்னாள் அந்தப்பெண்.
"உலகம் போற்றும் உத்தம ராஜாவே! நான் நாட்டியம் கற்றுக்கொள்ள அந்தவழியாகத்தான் போயாக வேண்டும். நாட்டியம் சொல்லித்தரும் ஆசிரியர் விரைந்து கற்றுக் கொடுக்காமல் காலை, மாலை என்று அடிக்கடி வரச் சொன்னதால் நான் அந்த வழியாகப் போக வேண்டி வந்தது. என்னை நாட்டியம் கற்க அடிக்கடி வரச் சொன்ன நாட்டிய ஆசிரியரைத்தான் நீங்கள் தண்டிக்கவேண்டும்," என்றாள் அந்தப்பெண்.
"அப்படியா! நீ போகலாம். நாட்டிய ஆசிரியர் தான் உண்மைக் குற்றவாளி என்று
அறிந்து கொண்டேன், என்று சொன்னராஜா நாட்டிய ஆசிரியரை கைது செய்து
கொண்டு வரும்படி உத்திரவிட்டான்.
நாட்டிய ஆசிரியரோ அப்பாவி. அவருக்கு புகார், வழக்கு எதுவும் புரியவில்லை.
ராஜாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு புரியலை. மெளனமாக நின்றார்.
உடனே முட்டாள் ராஜா, இவன்தான் குற்றவாளி என்று கண்டுபிடித்துவிட்டேன், என்று கூறி உரக்கச் சிரித்தான்.
நாளை சூரிய உதயத்தின் போது நடன ஆசிரியர் பொதுமக்கள் முன்னிலையில்
தூக்கிலிட உத்திரவிடுகிறேன். இனிமேல் அவன் காரணம். இவன் காரணம், என்று சொல்லி யாரும் தப்பிக்கமுடியாது; இந்த வழக்கு அதற்கு உதாரணமாகவும் தவறு செய்பவர்களுக்கு எச்சரிக்கையாகவும் இருக்கும்! இதை நாட்டு மக்களுக்கு சேனாதிபதி அறிவிக்க கட்டளையிடுகிறேன்," என்று முட்டாள் ராஜா மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்.
நடன ஆசிரியர் மனைவி பக்கத்துவீட்டில் வசிக்கும் வீரசேணன் என்ற
வாலிபரிடம் சொல்லி எப்படியாவது தன்கணவரைக் காப்பாற்றவேண்டும்
என்று கெஞ்சி அழுதாள்.
வீர சேணன் புத்திசாலி. அழாதீர்கள். முட்டாள் ராஜாவின் பைத்தியக்காரத்
தனத்துக்கு ஒரு முடிவு கட்டிவிட்டு உங்கள் கணவரை நான் மீட்டு வருகிறேன்," என்று தைரியம்சொன்னான்.
வீர சேணன் தன் நண்பனை அழைத்து தனது திட்டத்தை அவனிடம் சொல்லி,
சரியான நேரத்தில் தூக்கு மேடை மைதானத்துக்கு வந்துவிடவேண்டும் என்று
சொல்லி அனுப்பினான்.
தூக்கிலிடும் நேரம் நெருங்க, நெருங்க மக்கள் கூட்டமும் அதிகரித்தது. முட்டாள் ராஜா தனது பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தான். இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா? என்று பொதுமக்கள் வேதனையோடு பேசிக்கொண்டனர்.
நாட்டிய ஆசிரியரின் மனைவி சிந்திய மூக்கும் அழுத கண்ணீருமாக அங்கே
பார்ப்பவர்கள் மனது கலங்கநின்று கொண்டிருந்தார். அப்போது முட்டாள்
ராஜாவின் மெய்க்காப்பாளரோடு யாரோ உரத்த குரலில் சத்தம் போட்டு பேச
ராஜா, என்ன சப்தம் அங்கே? என்று கேட்டான்.
"தங்களைப் பார்த்தே ஆகவேண்டுமென்று இருவர் தகராறு செய்கிறார்கள்.
தூக்குத்தண்டனை நிறைவேற்றிய பிறகு ராஜாவை அவையில் சந்திக்கலாம்
என்று சொன்னோம். ஆனால் நாட்டிய ஆசிரியருக்குப் பதிலாக தாங்கள்
அந்தத் தண்டனையை ஏற்கவேண்டும்.
அதனால் ராஜாவை இப்போதே சந்தித்தாக வேண்டும் என்று பிடிவாதம்
பிடிக்கின்றனர்," என்று மெய்காப்பாளர் ராஜாவிடம் தெரிவித்தார்.
அழைத்து வாருங்கள் என்று வரப்போகும் ஆபத்தை அறியாமல்,
ராஜா மீசையை நீவிவிட்டுக்கொண்டே ராஜ கம்பீரமாகச் சொன்னார்.
வீரசேணனும் அவனது நண்பனும் ராஜா முன் நிறுத்தப்பட்டனர்.
உடனே சற்றும் தாமதிக்காமல் வீரசேணன், " ராஜனுக்கெல்லாம்
ராஜனே! நீதி நெறி தவறாது ஆட்சி நடத்தும் மகாராஜாவே! உன் புகழ் ஓங்குக!
நாட்டிய ஆசிரியருக்குப்பதிலாக என்னைத் தூக்கிலிடுங்கள் உங்களுக்குக்
கோடிப்புண்ணியம், " என்றான் வீரசேணன்.
உடனே சற்றும் தாமதிக்காமல் வீரசேணனின் நண்பன், " இல்லை மகாராஜா,
என்னைத்தான் நீங்கள் தூக்கிலிட வேண்டும் " என்றான்.
ராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. "பயித்தியமா பிடித்திருக்கிறது உங்களுக்கு.
தூக்கில் தொங்க நான், நீ என்று போட்டி போடுகிறீர்களே? சரியான மடையர்களாக இருக்கிறீர்களே! " என்றான் ராஜா.
வீரசேணனின் நண்பன்," எக்காரணம் கொண்டும் இவனைத் தூக்கில் போடாதீர்கள். என்னைத் தூக்கில் போடுங்கள், என்றான் ராஜாவிடம். " ஆசையைப் பாரு, நீ ராஜா ஆயிடலாம்னு பாக்குறியா? நான் விடமாட்டேன். ராஜா, என்னைத் தூக்கிலிடுங்கள், என்றான் வீரசேணன் அவசர,அவசரமாக.
ராஜாவுக்கு கோபம் வந்துவிட்டது. " என்ன உளறுகிறீர்கள்? தூக்கிலிட்டால் ராஜா ஆகி விடுவீர்களா? புரியும்படி சொல்லாவிட்டால் இப்போதே உங்கள் இருவர் தலையையும் சீவிவிடுவேன், என்றார் ராஜா.
"ராஜா! முக்காலமும் உணர்ந்த மாமுனிவரைச் சந்தித்தோம். அவர்தான் சொன்னார்.
ராஜாவின் கட்டளையால் யார் இந்த நேரத்தில் தூக்கிலிடப்பட்டு மரணமடைகிறாரோ, அவர் இந்த தேசத்துக்கு அடுத்த ராஜா! அதுமட்டுமல்ல, அந்த ராஜாவுக்கு சாவே கிடையாது, என்று சொன்னார். அதனால்தான் ராஜா ஆகும் ஆசையில் நாங்கள் எங்களைத் தூக்கிலிடும்படி கேட்டோம்," என்றான் வீரசேணன்.
வீரசேணனின் நண்பன் வேகமாக," முனிவர் என்னிடம்தான் முதலில் சொன்னார். எனவே, என்னைத்தான் தூக்கிலிட நீங்கள் கட்டளையிட வேண்டும், என்றான்.
ராஜா கடகடவென சிரித்தான். "இதைக் கேட்டபின்னும் உங்களைத் தூக்கிலிட
நான் என்ன முட்டாளா? தளபதியே நாட்டிய ஆசிரியருக்குப் பதிலாக
என்னைக் காலதாமதமின்றி தூக்கிலிடுங்கள். இது ராஜகட்டளை! உடனே
நிறைவேறட்டும்..ம்ம்... ,"என்றான் முட்டாள் ராஜா.
அப்புறம் என்ன? ராஜாவின் விருப்பப்படியே ராஜா தூக்கிலிடப்பட்டான்.
முட்டாள் ராஜாவை சமயோசிதமாக தூக்கிலிட வைத்த வீரசேணனை
பொதுமக்கள் அந்த இடத்திலேயே ராஜாவாக்கினர்.
நாட்டிய ஆசிரியரும் அவரின் மனைவியும் வீரசேணனுக்கும் அவனது
நண்பனுக்கும் நன்றி தெரிவித்தனர். முட்டாள் ராஜா முட்டாள்தனமாகவே
ஒழிந்ததில் அந்தநாட்டு மக்கள் சந்தோஷமாகக் கொண்டாடினர்.
நீதி:- முட்டாளிடம் நியாயம்,உபதேசம் எல்லாம் பேசி நேர விரயம்
செய்யக்கூடாது. ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கனும்; பாடுற மாட்டை பாடித்தான் கறக்கனும் என்ற முதுமொழி உண்டு. சில நேரங்களில் புத்திசாலித்தனமாக செயல்பட்டால்தான் முட்டாள்களை வெற்றிகானமுடியும்.
முட்டாள் தனமாகப் பேசுபவரிடம் நம் பொன்னான நேரத்தைச் செலவு செய்யக்கூடாது. அது கண்ணைத் திறந்துகொண்டே
கிணற்றில் விழுவது போல!
Subscribe to:
Posts (Atom)